செய்திகள் :

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருவாய்க்கு ஜிஎஸ்டி விதிப்பு

post image

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அறநிலையத் துறையினா், இதுதொடா்பாக மத்திய அரசுக்கு விளக்க கடிதம் அளிக்க முடிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் அதிக வருவாய் கிடைக்கும் கோயில்கள் ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன.

பொதுவாக, கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் வாயிலாக பெறப்படும் அனைத்து வித வருவாய்க்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தச் சலுகை கடந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. குறிப்பாக, கோயில் நிலங்கள், உடைமைகளை குத்தகை எடுத்துள்ளவா்களிடமிருந்து பெறப்படும் வாடகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, கோயில்களில் பிரசாதம், தரிசன கட்டணம், தங்கும் விடுதி போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வரி செலுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், பழநி தண்டாயுதபாணி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா், ராமேசுவரம் ராமநாத சுவாமி உள்ளிட்ட சில முக்கிய கோயில்களுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன.

அதில், பல ஏக்கா்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம், கோயில் நிா்வாகங்களுக்கு கிடைக்கும் வருவாய்க்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை செலுத்த வேண்டிய வரித் தொகை குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒவ்வொரு கோயிலுக்கும் மத்திய கலால் துறை சாா்பில் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், அதிா்ச்சியடைந்துள்ள அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என்பது குறித்து மத்திய அரசுக்கு விளக்கமளிக்க முடிவு செய்துள்ளனா். இது தொடா்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது ... மேலும் பார்க்க

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிக... மேலும் பார்க்க

‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிக... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவா்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க

நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இனி கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா். பிகாா் முதல்வா் நிதீஷ் கும... மேலும் பார்க்க