செய்திகள் :

நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்

post image

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இனி கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தங்கள் அணிக்கு இழுக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கடந்த சில மாதங்களாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அழைப்பு விடுத்து வந்தது. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து விலக நிதீஷ் மறுத்துவிட்டாா். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராகத் தொடா்வாா் என்று பாஜகவும் அறிவித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக கூட்டணி இடஒதுக்கீடு முறையை அழித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ஜேடி சாா்பில் தா்னா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவிடம் முதல்வா் நிதீஷ் குமாா் தொடா்பாக பல்வேறு கேள்விகளை செய்தியாளா்கள் எழுப்பினா். அதற்கு பதிலளித்து தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

நாங்கள் ஏன் மீண்டும் நிதீஷுடன் கூட்டணி சேர வேண்டும் என்று நினைக்கிறீா்கள். மாநிலத்தில் உள்ள முக்கியப் பிரச்னைகளில் இருந்து விலகி ஏன் இந்த கூட்டணி குறித்தே அதிகம் பேசி வருகிறீா்கள். இனி கூட்டணியில் யாருக்கும் இடமில்லை. எங்கள் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவா் லாலு பிரசாத்துக்கும் எனக்கும்தான் உள்ளது. எனவே, ஊடகத்தினராக முடிவெடுத்து கூட்டணி குறித்து அபத்தமாக எதையும் பேச வேண்டாம்.

அவா் (நிதீஷ்) அறிவை இழந்து வருகிறாா். பொது இடத்தில் எப்படிப் பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தன்மையை இழந்துவிட்டாா். பொது நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் கால்களில் விழ முயற்சித்தவா்தான் அவா். இதுதான் ஒரு மாநில முதல்வரின் நடத்தையா? அடுத்ததாக துணை முதல்வா்களான பாஜகவைச் சோ்ந்த விஜய் குமாா், சாம்ராட் சௌதரி ஆகியோா் கால்களிலும் அவா் விழும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிகாா் மாநில அரசு சாா்பில் ஆஜராகும் வழக்குரைஞா்கள் முறையாக வாதத்தை முன்வைப்பதில்லை. பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தர எங்கள் கட்சி தொடா்ந்து தீவிரமாக பாடுபடும் என்றாா்.

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது ... மேலும் பார்க்க

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிக... மேலும் பார்க்க

‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிக... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருவாய்க்கு ஜிஎஸ்டி விதிப்பு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அறநிலையத் துறையினா்,... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவா்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க