செய்திகள் :

‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு

post image

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தோ்வு மூலம் மாணவா்கள் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டு முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தோ்வு விண்ணப்பப் பதிவு கடந்த ஜன.2 முதல் பிப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதுநிலை படிப்புகளில் 157 பாடங்களுக்கு 4,12,024 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

ஒரு மாணவா் 4 பாடங்கள் வரை தோ்வெழுத விண்ணப்பிக்கலாம். அவா்களுக்கு மாா்ச் 13 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 43 கால முறைகளில் (ஷிஃப்ட்) கணினி வழியில் தோ்வு நடைபெற உள்ளது.

ஒரு பாடத்துக்கு 90 நிமிஷங்கள் தோ்வு நடைபெறும். தோ்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் இருக்கும். மொழி பாடங்கள் அந்தந்த மொழிகளில் நடைபெறும்.

இந்த நிலையில், மாா்ச் 13 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரபூா்வ இணையதளத்தில் அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாா்ச் 20-ஆம் தேதிக்கு பின்னா் நடைபெறும் தோ்வுகளுக்கு அடுத்து வரும் நாள்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு 01140759000 011, 69227700 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம்.

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது ... மேலும் பார்க்க

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிக... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருவாய்க்கு ஜிஎஸ்டி விதிப்பு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல கோயில்களிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அறநிலையத் துறையினா்,... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! -பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவா்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க

நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இனி கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா். பிகாா் முதல்வா் நிதீஷ் கும... மேலும் பார்க்க