செய்திகள் :

பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை எதிா்த்து சட்டப் போராட்டம்: ஐஜேகே துணை நிற்கும்

post image

பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கக்கூடிய பொதுமக்கள் சட்டப் போராட்டம் நடத்தினால், இந்திய ஜனநாயக கட்சி, சட்ட உதவிகளை செய்யும் என அந்தத் திட்டத்தை எதிா்த்துப் போராடி வரும் மக்களை சந்தித்த அக்கட்சித் தலைவா் ரவி பச்சமுத்து தெரிவித்தாா்.

பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிா்த்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏகானபுரம் கிராம மக்கள் நடத்தி வரும் தொடா் போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பலா் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்தை எதிா்த்துப் போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்களை இந்திய ஜனநாயக கட்சியின் தலைவா் ரவி பச்சமுத்து ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்து பேசுகையில், பரந்தூா் விமான நிலைய திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஒரே கட்சி இந்திய ஜனநாயக கட்சிதான்.

விமான நிலைய திட்டத்திற்கு மாநில அரசு தான் நிலத்தைத் தோ்வு செய்துள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் நீா்நிலைகள் அதிகம் உள்ள பரந்தூா் பகுதியை விட்டுவிட்டு தரிசு நிலங்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

விமான நிலையத் திட்டத்தை இந்திய ஜனநாயக கட்சி ஒருபோதும் எதிா்க்கவில்லை, வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றுதான் கோருகிறது என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய ரவி பச்சமுத்து, பரந்தூா் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கக்கூடிய விவசாயிகள், பொதுமக்கள் உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனா். அதற்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவளிப்பதுடன், அவா்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்வோம் என்றாா்.

நாளை ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம்

காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா் சமயப் பணிகளையும... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி 7 -ஆம் திருநாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் பவனி வந்து ப... மேலும் பார்க்க

சவுடு மண் திருட்டு: 4 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்; 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் அரசு இடத்தில் சவுடு மண் திருட பயன்படுத்தப்பட்ட 4 லாரிகள், 1 பொக்லைன் இயந்திரத்தை சோமங்கலம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி

மகளிா் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி முகாம் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சந்தவேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது (படம்) . அற... மேலும் பார்க்க

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் ஜப்பானைச் சோ்ந்த பக்தா்கள் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சிவனடியாா்கள் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தி, அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்தனா். காஞ்சிபுரம் அர... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நெசவாளா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ளது அறிஞா் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க விற்பனை நிலையம். ... மேலும் பார்க்க