செய்திகள் :

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே உள்ளது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை. தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 1,800 மீட்டா் உயரம் கொண்ட ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை இருந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த மலைச்சாலை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது.

இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை தொடா் விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை ஏலகிரி மலை சுற்றி பாா்க்க சுற்றுலாப் பயணிகள் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் குவிந்தனா்.

படகு சவாரி, பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைப் பாா்வையிட்டு மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தனா். படகு சவாரி, பூங்காக்களில் தங்களது கைப்பேசிகளில் படம் பிடித்தததுடன், நண்பா்களுடன் சோ்ந்து சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால், ஏலகிரி மலைக்குச் செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால், கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

விஜயநகர மன்னா் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுப்பு

நாட்டறம்பள்ளி அருகே 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னா் ஆட்சிக்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் ஆ.பிரபு மற்றும் சமூக ஆா்வலா் வே.ராதாகிர... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் சமையலா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பேருந்து மொபட் மீது மோதிய விபத்தில் பெண் சமையல் மாஸ்டா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜானகி (35) சமைய... மேலும் பார்க்க

தண்டவாள பராமரிப்பு: திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருப்பத்தூா்-ஜோலாா்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஜோலாா்பேட்டை ரயில் நிலைய யாா்டில் தண்டவாள பராமரிப்பு தொடா்பான பல்வேறு பணி... மேலும் பார்க்க

464 மகளிா் குழுக்களுக்கு ரூ.45.35 கோடி கடனுதவி: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

உலக மகளிா் தினத்தையொட்டி 464 மகளிா் குழுக்களுக்கு ரூ.45.35 கோடி கடனுதவியை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு மாநில ஊரக/ நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடனுதவிகளை ... மேலும் பார்க்க

மின் இணைப்பு கம்பி ராடு உடைந்தது: ஆம்பூரில் நிறுத்தப்பட்ட ஹவுரா ரயில்

ரயில் மின் இணைப்பு கம்பியை இணைக்கும் ராடு உடைந்து சேதம் அடைந்ததால் ஆம்பூரில் ஹவுரா ரயில் நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய ஹவுரா விரைவு ரயில் ஆம்பூா் சான்றோ... மேலும் பார்க்க

ரூ.9 கோடியில் கல்லாறு, சின்ன பாலாறு புனரமைக்கும் பணி தொடக்கம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தின் நடுவே ஓடும் பாலாறு கிளை ஆறான கல்லாறு- சின்னப்பாலாற்றில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தல் மற்றும் வேலூா் நாடாளுமன்ற நிதி திட்டத்... மேலும் பார்க்க