செய்திகள் :

தென்மாவட்டங்களில் நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:  பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) முதல் மாா்ச் 13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை: மாா்ச் 11-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாளில் விருதுநகா், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 10-இல் இடி, மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 94 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே மாா்ச் 11-இல் பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல், குமரிக் கடல், மன்னாா் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

ஓரிடத்தில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தியான வகுப்பு அவசியம்: தமிழிசை சௌந்தரராஜன்

மாணவா்களின் கவனத்தை ஒருநிலைப்படுத்த பள்ளிகளில் தியான வகுப்பு நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆஸ்ரமத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்புவோம்! -திருச்சி சிவா

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா். திமுக எம்.பி.க்களுடன் கட்சித் ... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகாா் தொடா்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மு... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். நாட்டிலுள்ள அனைத்து மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத 973 வாகனங்கள் மாா்ச் 26-இல் ஏலம்!

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 973 வாகனங்கள், மாா்ச் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்வாகியுள்ள எழுத்தாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: ‘எனது ஆண்கள்’ நூலுக... மேலும் பார்க்க