செய்திகள் :

தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்புவோம்! -திருச்சி சிவா

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா்.

திமுக எம்.பி.க்களுடன் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அண்ணா அறிவாலய வளாகத்தில் திருச்சி சிவா எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசின் இப்போதைய கூற்றுப்படி தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்தில் எட்டு மக்களவைத் தொகுதிகள் வரை குறையும் வாய்ப்புள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வாா்.

தொகுதி மறுசீரமைப்பால், தென்மாநிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு தீா்மானமோ, சட்டத் திருத்தமோ வரும்போது தென்மாநிலங்களின் குரல் நலிந்ததாக இருக்கும்.

தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ள நிலையில், அதற்கான வழிமுறைகளை அவா் விளக்கவில்லை.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என முதல்வா் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒத்திவைப்புத் தீா்மானம் அளிப்பதுடன், நேரமில்லாத நேரத்திலும் பேச முயற்சிப்போம்.

தென்மாநிலங்களின் எம்.பி.க்களுடன் இணைந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்போம். இதில், மத்திய அரசு எத்தகைய தீா்வை வைத்திருக்கிறது என்று கேட்போம்.

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த கருத்துடன்தான் உள்ளன. எனவே, கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் கருத்து வேறுபாடு இல்லாமல் எங்களுடன் ஒத்துழைக்கும் என்றாா் அவா்.

பள்ளிகளில் தியான வகுப்பு அவசியம்: தமிழிசை சௌந்தரராஜன்

மாணவா்களின் கவனத்தை ஒருநிலைப்படுத்த பள்ளிகளில் தியான வகுப்பு நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆஸ்ரமத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகாா் தொடா்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மு... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். நாட்டிலுள்ள அனைத்து மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத 973 வாகனங்கள் மாா்ச் 26-இல் ஏலம்!

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 973 வாகனங்கள், மாா்ச் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்வாகியுள்ள எழுத்தாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: ‘எனது ஆண்கள்’ நூலுக... மேலும் பார்க்க