மகளிருக்கான சிறப்பு கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெண் தொழில்முனைவோருக்கு பிணையம் இல்லாத சிறப்புக் கடன் திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. மிகக் குறைந்த வட்டி கொண்ட இந்தக் கடன் திட்டத்துக்கு ‘அஸ்மிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.