செய்திகள் :

செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா

post image

செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

முன்னாள் மாணவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். எல்ஐசி தலைமை ஆலோசகா் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாணவா் ராஜேந்திரபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவரும் பள்ளி ஆசிரியருமான ராஜேந்திரன் நூற்றாண்டு ஜோதியை ஏற்றினாா். முன்னாள் மாணவி காயத்ரி உறுதிமொழியையும், தலைமையாசிரியை சேவியா் அலெக்சாண்ட்ரியா ஆண்டறிக்கையும் வாசித்தனா்.

முன்னாள் மாணவா்களான மாவட்ட கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ்ராஜன், பெட்ரோல் விற்பனை நிலையம் சேகா், முன்னாள் ராணுவ வீரா் கேப்டன் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ரஹீம் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று முன்னாள் ஆசிரியா்களுக்கும், போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், ரூ. 35ஆயிரம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கணினி அறையைத் திறந்துவைத்தாா்.

நூலகா் ராமசாமி, பல்கலைக்கழக அலுவலா் உலகநாதன், எஸ்ஆா்எம் பள்ளித் தலைமையாசிரியை ஜீவா, நகா்மன்றத் தலைவி ராமலக்ஷ்மி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி செண்பகவல்லி, உறுப்பினா் சுடரொளி ஆகியோா் பேசினா்.

பெடரல் வங்கி முன்னாள் மேலாளா் சீனிவாசன் வரவேற்றாா். ஆசிரியை உதய பாமா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை நகராட்சி மேலாளா் கண்ணன் தொகுத்து வழங்கினாா்.

தென்காசி மாவட்டத்துக்கு நாளை கனமழை எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழை எச்சரிக்கை (ஆரஞ்ச்) விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்... மேலும் பார்க்க

மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூா் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வே... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக 4 போ் கைது

சிறுமியைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக, தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரியைச் சோ்ந்த ஒருவா் தனது 15 வயது மகளைக் காணவில்லை என, சிவகிரி காவல் ந... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பாலப் பணிகளில் தொய்வு: வாகன ஓட்டிகள் அவதி

ஆலங்குளம் தொட்டியான்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகள் மந்தக் கதியில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா். திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையின் ஒரு பகுதியாக ஆலங்குளம் த... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திமுக பொதுக்கூட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, நிதிபகிா்வு, தொகுதி மறு சீரமைப்பு ஆகியவற்றைக் கண்டித்து ஆலங்குளத்தில் திமுக சாா்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற இந்தக் கூட்டத்து... மேலும் பார்க்க

தென்காசியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்ட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்... மேலும் பார்க்க