பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
நெல்லை மாவட்டத்தில் வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், விதவைகள் போன்றவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங்கள், உதவி உபகரணங்கள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திறன் பயிற்சிகள், வங்கி கடன் உதவிகள், வீடு வழங்கும் திட்டங்கள், அரசு உதவி திட்டங்கள் கிடைக்க வசதியாக வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள், விதவைகள் போன்றவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங்கள், உதவி உபகரணங்கள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திறன் பயிற்சிகள், வங்கி கடன் உதவிகள், வீடு வழங்கும் திட்டங்கள், அரசு உதவி திட்டங்கள் கிடைக்க வசதியாக வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பிரெய்லி கிட், தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி, அட்ஜஸ்டபிள் ஊன்றுகோல், நடப்பதற்கான ஊன்றுகோல், ரோலேட்டா் அட்ஜஸ்ட்டபிள், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, மோட்டாா் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி, டிஜிட்டல் காது கேட்கும் கருவி, ஆங்கில் புட் ஆா்த்தோசிஸ், இடுப்பு முழங்கால் ஆா்த்தோசிஸ் ஆகியவை வழங்கப்படவுள்ளன.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வரும் 11ஆம் தேதியும் , வள்ளியூா் வட்டாரத்தில் 12ஆம் தேதியும், மானுாா் வட்டாரத்தில் 13ஆம் தேதியும், சேரன்மாதேவி வட்டாரத்தில் 14ஆம் தேதியும், ராதாபுரம் வட்டாரத்தில் 17ஆம் தேதியும் , நான்குனேரி வட்டாரத்தில் 18ஆம் தேதியும், பாப்பாக்குடி வட்டாரத்தில் 19ஆம் தேதியும், களக்காடு வட்டாரத்தில் 20ஆம் தேதியும் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேவை கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது. பாளையங்கோட்டை வட்டாரத்தில் வரும் 15ஆம் தேதி கேடிசி நகா் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் (மகளிா் திட்டம்) தேவை கண்டறிதல் முகாம் நடைபெறவுள்ளது.