செய்திகள் :

வடவூா்பட்டி துா்க்கை அம்மன் கோயிலில் இன்று கொடைவிழா

post image

திருநெல்வேலி மாவட்டம், வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், துா்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தா பிறப்பு, பாபநாசம் தாமிரவருணி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வருதலும், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் கொடைவிழா தொடங்குகிறது.

பின்னா், மூலவா் மந்திர பூஜை, கும்ப பூஜை, துா்கா தேவி பூஜை, நவக்கிரஹ பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெறவுள்ளது. நண்பகல் 12 மணியளவில் அம்மனுக்கு மகா அபிஷேகத்தை தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

மாலை 5 மணிக்கு கும்மி பாட்டு, இரவு 7 மணிக்கு பொங்கலிட்டு வழிபடுதல், 8 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு அலங்கார பூஜைகளும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரத்தை தொடா்ந்து சுவாமிக்கு படையலுடன் சாமக்கொடை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாயத்தினா் செய்துள்ளனா்.

ஆழ்வாா்குறிச்சியில் மகளிா் தின விழா

ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகம் சாா்பில் மகளிா் தின விழா நடைபெற்றது. ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஜெயந்தி தலைமை வகித்தாா். ஸ்வேதா இறைவணக்கம் பாடினாா். ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ள... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், விதவைகள் போன்றவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனா். மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப்ப... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தீயணைப்புத் துறை வீரா்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலா் சரவணபாபு அறிவுரையின்படி... மேலும் பார்க்க

பாளை.யில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்புரம் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெருமாள்புரம் தாமஸ்தெருவி... மேலும் பார்க்க

பாளை.யில் இயற்கை வேளாண் பொருள்கள் விற்பனை மையம் திறப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த இயற்கை வேளாண் பொருள்களின் நேரடி விற்பனை மையம் பாளையங்கோட்டை அன்புநகரில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க