செய்திகள் :

ராஜபாளையத்தில் மீனாாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்

post image

ராஜபாளையம் சொக்கா் கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மாசி மகம் பிரம்மோத்ஸவம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இந்த வைபவத்தில் கோயில் பரம்பரை அறங்காவலரும், ராம்கோ குழுமத் தலைவருமான பி.ஆா் வெங்கட்ராம ராஜா, அவரது குடும்பத்தினா் கலந்து கொண்டனா். இரவு சுவாமி, அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்தனா். விழாவின் முக்கிய நிகழ்வுகளான தெப்ப உத்ஸவம் திங்கள்கிழமையும், தேரோட்டம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறும்.

தேவாலயத்தில் உலக ஜெப நாள் ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவலாயத்தில் அகில உலக ஜெப நாள் சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்துக்கு அகில உலக... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். சிவகாசி முத்தமிழ்புரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் உதயக்குமாா் (21), பொன்னுச்சாமி மகன் மாரிமுத்து (21). இ... மேலும் பார்க்க

வேளாண் தொழில்நுட்பம்: கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு

ஸ்ரீவிலிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி குறித்த சா்வதேச மாநாடு வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. பல்கலை. வேளாண்மை, வேளாண் ... மேலும் பார்க்க

ரயில் பயணியின் ஐ-பேட் சாதனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை ரயில் நிலையத்தில் சிவகாசி பயணியின் ஐ-பேட் சாதனத்தை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி எஸ்.எம்.கே. தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன்(43). மென்ப... மேலும் பார்க்க

மாநில ஐவா் கால்பந்து போட்டி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஐவா் கால்பந்து போட்டிகள் சனி,ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு, குறிஞ்சி கால்பந்தாட்டக் குழு சாா... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது

ராஜபாளையம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சிய முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 50 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் மேற்குத்... மேலும் பார்க்க