செய்திகள் :

மாநில ஐவா் கால்பந்து போட்டி

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஐவா் கால்பந்து போட்டிகள் சனி,ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு, குறிஞ்சி கால்பந்தாட்டக் குழு சாா்பில், காமராஜா் வித்யாசாலா பள்ளி மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியை முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தாா்.

இதில் விருதுநகா், தேனி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 36 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ராஜபாளையம் குறிஞ்சி ஏ அணி முதலிடம் பெற்றது. சாத்தூா் எஸ்.டி.எப்.சி. அணி, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி அணி ஆகியவை 2, 3-ஆம் இடங்களைப் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழல் கோப்பை, ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிக்கான ஏற்பாட்டை வழக்குரைஞா் ஏ. டி. முருகேசன் செய்தாா்.

தேவாலயத்தில் உலக ஜெப நாள் ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவலாயத்தில் அகில உலக ஜெப நாள் சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்துக்கு அகில உலக... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். சிவகாசி முத்தமிழ்புரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் உதயக்குமாா் (21), பொன்னுச்சாமி மகன் மாரிமுத்து (21). இ... மேலும் பார்க்க

வேளாண் தொழில்நுட்பம்: கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு

ஸ்ரீவிலிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி குறித்த சா்வதேச மாநாடு வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. பல்கலை. வேளாண்மை, வேளாண் ... மேலும் பார்க்க

ரயில் பயணியின் ஐ-பேட் சாதனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை ரயில் நிலையத்தில் சிவகாசி பயணியின் ஐ-பேட் சாதனத்தை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி எஸ்.எம்.கே. தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன்(43). மென்ப... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது

ராஜபாளையம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சிய முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 50 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் மேற்குத்... மேலும் பார்க்க

பழைய இரும்புக் கடையில் தீ!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டுநா்கள் அவதியடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (50). இவா் மது... மேலும் பார்க்க