செய்திகள் :

மின்சாரக் காா்களின் விற்பனை 19% அதிகரிப்பு

post image

இந்தியாவில் மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 18.95 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் 8,968 மின்சார பயணிகள் வாகனங்கள் இந்தியச் சந்தயில் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 18.95 சதவீதம் அதிகம். அப்போது மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை 7,539-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் மின்சார பயணிகள் வாகனப் பிரிவில் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த மாதத்தில் நிறுவனம் 3,825 மின்சார பயணிகள் வாகனங்களை விற்பனை செய்தது.அதே நேரம், 3,270 மின்சார பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து இந்தப் பிரிவில் எம்ஜி மோட்டாா் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்தியாவின் ஒட்டுமொத்த பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு 3 சதவீதத்தை எட்டியுள்ளது.

2 சக்கர வாகனங்கள்: கடந்த பிப்ரவரி மாதத்தில் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 76,086-ஆக இருந்தது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8.05 சதவீதம் குறைவு. அப்போது 82,745 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின.

மதிப்பீட்டு மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவன மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை 21,389-ஆக இருந்தது.கடந்த பிப்ரவரில் மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிந்தாலும், ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்களுக்கான சந்தையில் அந்தப் பிரிவு தனது 5.6 சதவீதப் பங்கை தக்க வைத்துக் கொண்டது.

3 சக்கர வாகனங்கள்: 2024 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை இந்த பிப்ரவரியில் 5 சதவீதம் அதிகரித்து 53,116-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மின்சார வா்த்தக வாகனங்களின் விற்பனை 1 சதவீதம் அதிகரித்து 856-ஆக உள்ளது. வா்த்தக வாகனச் சந்தையில் மின்சாரப் பிரிவின் பங்கு 1 சதவீதத்தைத் தாண்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பேற்றதுமுதல் சரியும் எலான் மஸ்க்!

அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 7வது வாரமாகத் தொடர்ந்து சரிந்துள்ளது. டெஸ்லாவின் மதிப்பு கடந்த வாரத்தில் 10% சரிந்த நிலையில், இதுவரை 800 பில்லியன் டாலர் (6.9... மேலும் பார்க்க

இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!

நொய்டா: ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர் விற்பனை நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.வீட்டு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹையர், புதிய ஏசி உற்பத்தி மற்றும் ... மேலும் பார்க்க

மகளிருக்கான சிறப்பு கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து வங... மேலும் பார்க்க

சக்கைப்போடு போடும் 7-சீட்டர் கார் இதுதான்! விலைக்காகவே வாங்கலாம்!!

இந்திய வாகனச் சந்தையில், 7 இருக்கை வசதிகொண்ட கார்களின் தகப்பன் என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றிருக்கிறது மாருதி சுசூகி எர்டிகா.இந்தியாவில், எப்போதும் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து செல்லும் அளவுக்கு ... மேலும் பார்க்க

ஹூண்டாய் விற்பனை 3% சரிவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 3 ரிந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்... மேலும் பார்க்க

விரைவில் ஏடிஎம் மையத்திலிருந்து பிஎஃப் பணம் எடுக்கும் வசதி!

ஹைதராபாத்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 'ஈபிஎஃப்ஓ 3.0' என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற... மேலும் பார்க்க