செய்திகள் :

இந்திய சிறைகளில் 70% விசாரணைக் கைதிகள்!

post image

இந்திய சிறைச்சாலைகளில் 70% பேர் விசாரணைக் கைதிகளாக இருப்பதாக உள் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

ஜாமீன் அல்லது அபராதத் தொகையை செலுத்தப் போதிய பணம் இல்லாததால், அவர்கள் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 10) காலை தொடங்கி நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், சிறைச் சாலைகளில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவருவது குறித்தும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எக்ஸ்-ரே ஸ்கேனர், போதைப் பொருள்கள் இருப்பைக் கண்டறியும் சோதனைக் கருவிகள் போன்ற தொழில்நுட்பங்களை சிறைகள் பயன்படுத்த வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறைகளில் போதைப்பொருள் நுழைவதைத் தடுக்கும் வகையில் வாயில்களில் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

சிறையில் 70% விசாரணைக் கைதிகள் உள்ளனர். அவர்கள் அளிக்க வேண்டிய அபராதத் தொகையைவிட, ஜாமீனுக்கு செலவழிக்கும் செலவை விட அவர்களை சிறையில் வைத்து பராமரிப்பதற்கான தொகை அதிகமாக உள்ளது.

இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய கைதிகளின் அபராதத் தொகைக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சிறைத் துறை போதிய நிதியை ஒதுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க | சம்பல் வன்முறையில் சிறை சென்ற பெண்: விடுதலையாக உதவிய 120 கிலோ உடல் எடை!

தங்கம் கடத்தல்: நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவு!

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்க... மேலும் பார்க்க

பிரித்தாளும் அரசியல் பிடிக்கவில்லை: பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங். கட்சியில் ஐக்கியம்!

கொல்கத்தா : மேற்கு வங்கத்திலுள்ள ஹல்தியா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்திருந்த தாபசி மண்டல், இன்று(மார்ச் 10) அம்மாநில ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இ... மேலும் பார்க்க

சம்பல் வன்முறையில் சிறை சென்ற பெண்: விடுதலையாக உதவிய 120 கிலோ உடல் எடை!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குற்றவாளியாகக் கருதி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பெண் 84 நாள்களுக்குப் பிறகு நிரபராதி என உறுதி செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார். அவர் ... மேலும் பார்க்க

முதலிரவில் புதுமண தம்பதி மரணம்! காரணம் தெரியாமல் குழப்பத்தில் உறவினர்கள்

திருமண நாளன்று இரவில் புதுமண தம்பதி மரணித்திருப்பது அயோத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும்... மேலும் பார்க்க

ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!

இந்திய மணப்பெண்கள் திருமண நாளில் ஆடம்பர ஆடைகள் அணிவதைத் தவிர்த்து வருவதாக நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆடம்பரமான இந்திய திருமண கலாசாரத்துக்கு மாறாக எளிமையான வடிவமைப... மேலும் பார்க்க

சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

சோப்பு விலையை உயர்த்த முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் தயாரிப்பு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற... மேலும் பார்க்க