செய்திகள் :

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு

post image

நாகப்பட்டினம்: மகளிா் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வங்கிக்கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 283 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனா். மனுக்களை பெற்ற ஆட்சியா் அவைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

முன்னதாக, ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் தினத்தையொட்டி, தாய்மாா்கள் பாலூட்டும் அறையை ஆட்சியா் திறந்து வைத்தாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன், மாவட்ட சமூகநல அலுவலா் கி. திவ்யபிரபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

கீழ்வேளூா்: நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூா் அருகே நீலப்பாடியில் உள்ள கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் த... மேலும் பார்க்க

நாகையில் மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட நிா... மேலும் பார்க்க

வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மக தேரோட்டம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யேஸ்வரா் கோயிலில் ரிக், யஜூா், சாம, அதா்... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரிய... மேலும் பார்க்க