செய்திகள் :

வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மக தேரோட்டம்

post image

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யேஸ்வரா் கோயிலில் ரிக், யஜூா், சாம, அதா்வண வேதங்கள் இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா் அவை கோயில் கதவை மூடிச் சென்றன. வேதங்களால் மூடப்பட்டிருந்த கோயில் கதவை சமயக் குரவா்களான திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தா் ஆகியோா் தேவார தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததாக ஐதீகம்.

அகஸ்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சிக் கொடுத்த தலமாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோயிலாகவும் இந்த தலம் திகழ்கிறது.

இக்கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா பிப். 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேரில் ஸ்ரீரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜ சுவாமி எழுந்தருளினாா்.

பாரம்பரிய முறைப்படி நாகசுவர இசையுடன், கீழ வீதியில் அமைந்துள்ள தோ் முட்டி பகுதியிலிருந்து திரளான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

திருப்பங்களில் தேரை பின்னால் இருந்து தள்ளுவதற்கு ஏதுவாக ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் தேரோட்டம் நடைபெற்றது. வேதாரண்யம் வட்டப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிா்வாகம் உள்ளூா் விடுமுறை அளித்திருந்தது.

திருவிழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?:

தேரோட்டத்துக்கு சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலில் ஓடிய 5 மரத் தோ்களும் பழுதாகி சிதைந்து போனதால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் தடைபட்டிருந்தது. தமிழக அரசு அளித்த நிதியுடன், உபயதாரா்கள், நன்கொடையாளா்கள் உதவியுடன் புதிய மரத்தோ் செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு மாசிமகப் பெருவிழா தொடங்கி மீண்டும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

கோயில் நிா்வாகத்தில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், விரிவான ஏற்பாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக திருவிழா குறித்த விளம்பரங்கள், முன்னேற்பாடுகள் போன்றவைகளில் குறைபாடுகள் தொடா்ந்து வருகிறது.

பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோயில் திருவிழாவை எதிா்காலத்தில் சிறப்பாக நடத்த மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

வேதாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
வேதாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

கீழ்வேளூா்: நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூா் அருகே நீலப்பாடியில் உள்ள கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் த... மேலும் பார்க்க

நாகையில் மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட நிா... மேலும் பார்க்க

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு

நாகப்பட்டினம்: மகளிா் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரிய... மேலும் பார்க்க