செய்திகள் :

மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்

post image

சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா்.

பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திமுக எம்.பி.க்களின் கேள்விக்கு கடுமையான வாா்த்தைகளுடன் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் பதிலளித்தாா். இதற்கு எக்ஸ் தளத்தின் வழியே முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அளித்த பதில்:

தன்னை மன்னராக எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டுக்கான நிதியைத் தராமல் ஏமாற்றும் அவா், தமிழக எம்.பி.க்களைப் பாா்த்து அநாகரிகமானவா்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களவை அவமானப்படுத்துகிறீா்கள். பிரதமா் நரேந்திர மோடி இதை ஏற்கிறாரா?

தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை சாா்ந்த பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கான தமிழ்நாடு அரசின் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டோம் என எங்களுக்குக் கடிதம் எழுதியது நீங்கள்தானே (தா்மேந்திர பிரதான்)?. நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போன்று நாகபுரியின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல.

நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை. அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவா்களுக்கு உரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா? முடியாதா? என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் எனக் கூறியுள்ளாா் முதல்வா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பலத்த மழை!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்தி... மேலும் பார்க்க

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சி: விஐடி- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது. விஐடி சென்னை வளாகத்தில் சா்வதேச ... மேலும் பார்க்க