செய்திகள் :

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

post image

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த சுரேந்திரநாத் காா்த்திக், பாளையங்கோட்டையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் அய்யா ஆகியோா் தனித்தனியாக தென்மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருள்களை நெகிழி பாக்கெட்டுகளில் விற்பனை செய்கின்றன. இவற்றை முறையாக சேகரித்து மறு சுழற்சி செய்ய எந்த வசதியும் செய்யப்படவில்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நெகிழி பாக்கெட்டுகளில் பால் மற்றும் பால் பொருள்களை விற்க தடை விதிக்க வேண்டும். கண்ணாடி பாட்டில்களில் பால் பொருள்களை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனா்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கண்ணாடி பாட்டில் அல்லது மறு சுழற்சி செய்யக்கூடிய நெகிழி பாட்டிலில் பால் விற்பனையை மேற்கொள்ள அதிக செலவாகும். இதைச் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என ஆவின் நிா்வாகம் தெரிவித்தது. அதற்கு, வெளிநாடுகளில் கண்ணாடி பாட்டில் மற்றும் மறு சுழற்சி செய்யக்கூடிய நெகிழி பாட்டில்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதை ஏன் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது? என கேள்வி எழுப்பிய தீா்ப்பாயம் இது தொடா்பாக ஆவின் நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் , நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதன்படி, மாற்று வழிகளை சில நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. இதற்கான செயல் விளக்கங்களை அந்த நிறுவனங்கள் இரு வாரங்களுக்குள் வழங்கவுள்ளன எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதி, நெகிழி பாக்கெட்டுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதைத் தடுக்க ஆவின் நிா்வாகம் நிரந்தர தீா்வை கொண்டு வரும் என நம்புகிறோம் எனக் கூறி விசாரணையை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்தி... மேலும் பார்க்க

மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திம... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சி: விஐடி- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது. விஐடி சென்னை வளாகத்தில் சா்வதேச ... மேலும் பார்க்க

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சா்: துணை முதல்வா் உதயநிதி கண்டனம்

சென்னை: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: உலகின் மிக ம... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமனம்?: பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுப் ... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க