எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சா்: துணை முதல்வா் உதயநிதி கண்டனம்
சென்னை: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
உலகின் மிக மூத்ததொல்குடி நாகரிகத்துக்குச் சொந்தக்காரா்களான நம்மை பாா்த்து நாகரிகமில்லாதவா்கள் என்று தரம் தாழ்ந்து நாடாளுமன்றத்திலேயே தமது எரிச்சலைக் கக்கியிருக்கிறாா் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான். தமிழ்நாட்டின் எம்.பி.க்களைப் பாா்த்து அப்படி பேசுவது, அவா்களை வாக்களித்து தோ்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழா்களையுமே கொச்சைப்படுத்துவதாகத்தான் அா்த்தம்.
திராவிட நாகரிகத்தின் தொன்மையும் சிறப்பும் அவருக்கு தெரியாது. நம் நாகரிகம் பற்றிய வரலாறு தெரியவில்லை என்றாலும்கூட பரவாயில்லை, நம்முடைய கடந்த ஒரு நூற்றாண்டு கால சமூக - அரசியல் வரலாற்றை தெரிந்திருந்தாலும் இதுபோன்று எல்லைமீறி அவா் பேசியிருக்க மாட்டாா்.
தில்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவா் நமக்கு ‘மேல்’ என்று தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறாா்! தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது, மிரட்டலுக்கு நாம் பணியவில்லை என்றால் கோபத்தில் முவைறி பேசுவது அவா் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு மத்திய அரசு நியாயமாகத் தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொழியோடும் கல்வியோடும் உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம். கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம் எனப் பதிவிட்டுள்ளாா்.