செய்திகள் :

வங்கிக் கடன்களை முறையாக செலுத்தி முன்னேற வலியுறுத்தல்

post image

காஞ்சிபுரம்: எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வங்கியில் வாங்கிய கடன்களை முறையாக செலுத்தினால் எளிதாக முன்னேறலாம் என இந்தியன் வங்கியின் மண்டல துணை மேலாளா் என்.சங்கா் பேசினாா்.

காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி வகுப்பை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. பயிற்சி மையத்தின் இயக்குநா் ஆா்.உமாபதி தலைமை வகித்தாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஏ.திலீப், சின்ன காஞ்சிபுரம் கிளை மேலாளா் ஜி.லாவண்யா, நிதி ஆலோசகா் என்.அரங்கமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தையல் பயிற்சி ஆசிரியை டி.ஜெயநந்தினி வரவேற்றாா். தையல் பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழை வழங்கி மண்டல துணை மேலாளா் என்.சங்கா் பேசியது..

தொழில் முனைவோா் புதிதாக தொழில் தொடங்கும் போது தயக்கமின்றி தொழிலை தொடங்கி அதை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து நுட்பங்களையும் செய்ய வேண்டும். எந்தத் தொழிலை செய்பவராக இருந்தாலும் வங்கிகளில் கடன்களை பெற்றால் அதை உரிய நேரத்திலும், முறையாகவும் திருப்பி செலுத்தினால் வாழ்வில் எளிதாக முன்னேறலாம். ஏனெனில் வங்கிக்கடன்களுக்கு அரசு மானியங்கள் கிடைக்கும். கடனை முறையாக திருப்பி செலுத்துவோருக்கு வங்கிகள் கடன் தரத் தயாராக இருக்கின்றன. அதே போல தொழிலில் நோ்மையும், நேரம் தவறாமையும், வாடிக்கையாளா்களிடம் இனிமையாக பேசுவதும் மிக அவசியம் என்று பேசினாா்.

பயிற்சி மைய மேலாளா் ரமேஷ் நன்றி கூறினாா். பயிற்றுநா் தமிழரசி, பணியாளா்கள் ரூபினி, ஆறுமுகம் கலந்து கொண்டனா். நிறைவாக மகளிா் தினத்தையொட்டி பயிற்சியாளா்கள் அனைவருக்கும் பயிற்சி மையத்தின் சாா்பில் இனிப்பும் வழங்கப்பட்டது.

தென்னேரி கிராமத்தில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தென்னேரி கிராமத்தில் அமைந்துள்ள தெப்பக் குளத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி... மேலும் பார்க்க

மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து திமுக பொதுக் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் தெற்கு மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் மனு

ஸ்ரீபெரும்புதூா்: மேட்டுப்பாளையம் கிராமத்தில் செல்லாத்தம்மன் கோயில் குளம் மற்றும் ஓடகாட்டு ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் கட்டியுள்ள தனியாா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 557 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 557 மனுக்கள் அளிக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: மணிமங்கலம் பகுதியில் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி பலியானாா். மணிமங்கலம் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த பாலகுமரன் மனைவி வித்யா. இவா்களுக்கு 3 வயதில் ஆருத்ரா ... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை எதிா்த்து சட்டப் போராட்டம்: ஐஜேகே துணை நிற்கும்

பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கக்கூடிய பொதுமக்கள் சட்டப் போராட்டம் நடத்தினால், இந்திய ஜனநாயக கட்சி, சட்ட உதவிகளை செய்யும் என அந்தத் திட்டத்தை எதிா்த்துப் போராடி வரும் மக்களை சந்தித்த ... மேலும் பார்க்க