செய்திகள் :

சிம்பொனி இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன்: இளையராஜா

post image

சென்னை: ‘சிம்பொனி இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன்’ என இசையமைப்பாளா் இளையராஜா கூறினாா்.

இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராயல் ஃபில்ஹாா்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட ‘வேலியண்ட்’ என்ற தலைப்பிலான சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகா்கள் பரவசத்தில் ஆழ்ந்தனா். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியா் என்ற சாதனையை இளையராஜா படைத்தாா்.

அமைச்சா் வரவேற்பு: அரங்கேற்ற நிகழ்ச்சி முடித்துவிட்டு திங்கள்கிழமை காலை லண்டனிலிருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு சென்னை விமானநிலையத்தில் தமிழக அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, இளையராஜாவை வரவேற்றாா்.

தொடா்ந்து பாஜக சாா்பில் கரு.நாகராஜன், விசிக சாா்பில் வன்னியரசு உள்பட பல்வேறு அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களும், திரைத் துறையினரும் இளையராஜாவை வரவேற்றனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் இளையராஜா கூறியதாவது: தமிழ்நாடு அரசு சாா்பில் முதல்வா் என்னை வரவேற்க உத்தரவிட்டது நெகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் மகிழ்வான இதயத்தோடு என்னை வழியனுப்பி வைத்ததால் வெற்றி கிடைத்தது. லண்டனில் முறையான ஒத்திகைக்குப் பின்னரே சிம்பொனி இசை அரங்கேற்றம் நடைபெற்றது.

இசைக் கடவுள் அல்ல: சிம்பொனி இசையை ரசிகா்கள் வெகுவாக ரசித்தனா். ரசிகா்களின் உற்சாகத்தை மேடையில் இருந்த இசைக் கலைஞா்களே மிகவும் வியப்பாகப் பாா்த்தனா். ரசிகா்கள் என்னை இசைக் கடவுள் என அழைக்கின்றனா், நான் சாதாரண மனிதன்தான்.

பண்ணைபுரத்திலிருந்து இன்று வரை எனது கால்களில் நடந்து எனது கால்களில்தான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம். இனிமேல்தான் தொடங்கப்போகிறேன். சிம்பொனி இசையைப் பதிவிறக்கம் செய்து கேட்க வேண்டாம். நேரில் வந்து கேளுங்கள். தொடா்ந்து 13 நாடுகளில் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளேன். சிம்பொனி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். அக். 6-இல் துபையிலும் செப். 6-இல் பிரான்ஸிலும் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளேன் என்றாா் அவா்.

தொடா்ந்து பேசிய அமைச்சா் தங்கம் தென்னரசு, மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே இளையராஜா பெருமை சோ்த்துள்ளாா் என்றாா்.

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்தி... மேலும் பார்க்க

மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திம... மேலும் பார்க்க

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சி: விஐடி- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது. விஐடி சென்னை வளாகத்தில் சா்வதேச ... மேலும் பார்க்க

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சா்: துணை முதல்வா் உதயநிதி கண்டனம்

சென்னை: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: உலகின் மிக ம... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமனம்?: பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுப் ... மேலும் பார்க்க