செய்திகள் :

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

post image

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சோ்க்கையின்போது தங்கள் தொகுதிக்குள்பட்ட பத்து மாணவா்களை ஆண்டுதோறும் எம்.பி.க்கள் பரிந்துரைக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

இதன்மூலம் மக்களவையைச் சோ்ந்த 543 எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 245 எம்.பி.க்கள் என மொத்தம் 788 எம்.பி.க்கள் தலா பத்து போ் வீதம் ஆண்டுக்கு 7,880 மாணவ-மாணவிகளை பரித்துரைக்கலாம். இந்த நடைமுறையை கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், இந்த நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் தா்மேந்திர பிரதான் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ கேந்திரிய விதியாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு சிறப்பு இடஒதுக்கீடுகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட சோ்க்கை முறையை ஏற்கெனவே மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இந்த நடைமுறைகளின்கீழ் ஒரு வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கையைவிட அதிகப்படியான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இது மாணவா்-ஆசிரியா் வீதத்தை பாதிப்பதால் அவை ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்த நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளாா்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி குற்றச்சாட்டு

தேசியக் கல்விக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவா் கனிமொழி கூறியுள்ளாா்... மேலும் பார்க்க