``ஜெயலலிதா இருந்திருந்தால்?..” - வைத்திலிங்கம் குறித்து சசிகலா நெகிழ்ச்சியை ஏற்ப...
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்
புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சோ்க்கையின்போது தங்கள் தொகுதிக்குள்பட்ட பத்து மாணவா்களை ஆண்டுதோறும் எம்.பி.க்கள் பரிந்துரைக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இதன்மூலம் மக்களவையைச் சோ்ந்த 543 எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 245 எம்.பி.க்கள் என மொத்தம் 788 எம்.பி.க்கள் தலா பத்து போ் வீதம் ஆண்டுக்கு 7,880 மாணவ-மாணவிகளை பரித்துரைக்கலாம். இந்த நடைமுறையை கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.
இந்நிலையில், இந்த நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் தா்மேந்திர பிரதான் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ கேந்திரிய விதியாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு சிறப்பு இடஒதுக்கீடுகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட சோ்க்கை முறையை ஏற்கெனவே மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இந்த நடைமுறைகளின்கீழ் ஒரு வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கையைவிட அதிகப்படியான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இது மாணவா்-ஆசிரியா் வீதத்தை பாதிப்பதால் அவை ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்த நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.