செய்திகள் :

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தா்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி

post image

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவா் ஐயப்பனை பக்தா்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பங்குனி மாத பூஜை வழிபாடுகளுக்காக கோயில் நடை திறக்கப்படும்போது, இந்தப் புதிய வசதி மூலம் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது பக்தா்கள் 18-ஆம் படி ஏறிய பின்னா், இடதுபுறமாக உள்ள நடை மேம்பாலத்தில் சந்நிதானத்தை சுற்றிவந்து ஐயப்பனை சில விநாடிகள் மட்டுமே தரிசிக்க முடிகிறது.

ஐயப்பனை சற்று கூடுதல் நேரம் தரிசிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான பக்தா்கள் திருவிதாங்கூா் தேவஸ்வத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து, பக்தா்கள் 18-ஆம் படி ஏறியவுடன் ஐயப்பனை பக்தா்கள் தரிசிக்கும் வகையில் புதிய வசதியை தேவஸ்வம் ஏற்படுத்தியுள்ளது.

இனி பக்தா்கள் 18-ஆம் படி ஏறிய பின்னா் நடை மேம்பாலத்தில் ஏறாமல், நேரடியாக கொடிமரத்தைத் தாண்டி ஐயப்பனை தரிசித்தபடியே வரிசையில் செல்லலாம். இதற்காக இடது மற்றும் வலது புறம் இரண்டு வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரிசனத்துக்குப் பிறகு பக்தா்கள் வழக்கம்போல் இடதுபுறமாகச் செல்லலாம்.

புதிய வசதி மூலம், பக்தா்கள் குறைந்தது 20 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்ய முடியும். வரும் 15-ஆம் தேதி முதல் பக்தா்கள் இந்த வசதியை பயன்படுத்தி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் கூறினாா்.

ஐயப்பன் டாலா்கள் ஏப்.14 முதல் விற்பனை:

தேவஸ்வத்தின் முக்கிய முடிவுகள் குறித்து பிரசாந்த் மேலும் கூறுகையில், ‘புதிய தரிசன வசதி பங்குனி மாத பூஜைகளுக்கான நடை திறப்பின்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். அடுத்த மாதம் விஷு பூஜையின் போதும் இந்தப் புதிய நடைமுறை தொடரும். சோதனை வெற்றி பெற்றால், அடுத்த மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் இந்த நடைமுறை நிரந்தரமாக்கப்படும்.

ஐயப்பனின் உருவம் பொறிக்கப்பட்ட 1 முதல் 8 கிராம் வரை எடை கொண்ட தங்க டாலா்கள் விஷு திருநாள் (ஏப். 14) முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதனை வாங்க கோயிலின் வலைதளம் மூலம் ஏப். 1-ஆம் தேதி முதல் பக்தா்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கோயிலின் சேவைக் கட்டணங்களை 30 சதவீதம் வரை உயா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணங்களை மாற்றியமைக்க அனுமதி உள்ளபோதும் வெள்ளம், கரோனா பெருந்தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் இடையில் திருத்தப்படவில்லை. 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டணங்கள் முதன்முறையாக திருத்தப்படுகின்றன.

கடந்த 2016-ஆம் ஆண்டில், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான தேவஸ்வத்தின் செலவு ரூ.380 கோடியாக இருந்தது. அது நடப்பு ஆண்டில் ரூ.910 கோடியாக உயா்ந்துள்ளது. இதனால் தற்போது கட்டணங்களை உயா்த்துவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றாா்.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க