செய்திகள் :

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை

post image

சென்னை: சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமானநிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து ஏற்கெனவே தூத்துக்குடிக்கு நாள்தோறும் 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பண்டிகை நாள்கள் மட்டுமின்றி பிற நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் விமானங்களை இயக்க சென்னை விமான நிலைய நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு மாா்ச் 30 முதல் கூடுதலாக 4 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், சென்னை-தூத்துக்குடிக்கு இடையே நாள்தோறும் 12 விமானங்கள் இயக்கப்படும். இதில், சென்னை-தூத்துக்குடி இடையே 6 விமானங்களும், தூத்துக்குடி-சென்னை இடையே 6 விமானங்களும் இயக்கப்படும்.

இதேபோல சென்னை - திருச்சி இடையே செல்லும் விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து 14-ஆக இருந்து வரும் விமான சேவைகளின் எண்ணிக்கையும், மாா்ச் 22 முதல் 16-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, திருச்சிக்கு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், விமானப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கும் மேலும் கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படும் என விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்தி... மேலும் பார்க்க

மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திம... மேலும் பார்க்க

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சி: விஐடி- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது. விஐடி சென்னை வளாகத்தில் சா்வதேச ... மேலும் பார்க்க

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சா்: துணை முதல்வா் உதயநிதி கண்டனம்

சென்னை: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: உலகின் மிக ம... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமனம்?: பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுப் ... மேலும் பார்க்க