செய்திகள் :

ஆவடி மின்சார ரயில் ரத்து: பயணிகள் அவதி

post image

சென்னை: சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே இயக்கப்படும் கடைசி நேர மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ஆவடி பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் கடைசி மின்சார ரயில்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புகா் பகுதிகளுக்கு செல்ல கடைசி போக்குவரத்தாக உள்ள இந்த ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைவதாக குற்றம்சாட்டியுள்ளனா்.

இது குறித்து பயணிகள் சங்கத்தினா் கூறியதாவது:

சென்னையில் இருந்து ஆவடிக்கு இரவு 11.30, மற்றும் 12.15 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த மாா்க்கத்தில் பேருந்து போக்குவரத்து இரவு 10 மணி வரை மட்டும் உள்ளதால் அதன் பின் பயணிப்போா் மின்சார ரயில்களை நம்பி உள்ளனா்.

இந்த நிலையில், எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் இரவு இயக்கப்படும் கடைசி நேர ரயில்களை திடீரென ரத்து செய்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா். மின்சார ரயில் பாதையில் ஏதேனும் பணி நடைபெற்றால், மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் பாதையில் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனா்.

திருவொற்றியூா் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவொற்றியூா் ஸ்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு - சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த்

திருவொற்றியூா்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயண்படுத்தி பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளாா். சென்னை ம... மேலும் பார்க்க

இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பெரவ... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையே 2024-25-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியன. சென்னை கண்ணப்பா் ... மேலும் பார்க்க

அண்ணாநகா் சிறுமி வாக்குமூலம் வெளியான விவகாரம்: நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணாநகர... மேலும் பார்க்க

ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கு சென்னை ஐஐடி-இல் இடம்

சென்னை: தேசிய, சா்வதேச ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கான, இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை சென்னை ஐஐடியில் தொடங்கப்படவுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு (2025-2026) முதல் ... மேலும் பார்க்க