செய்திகள் :

வாக்காளா் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

post image

மகாராஷ்டிரம், ஹரியாணா தோ்தல்களில் வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை அமா்வில் உடனடி கேள்விநேரத்தின்போது இதுகுறித்து ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கையில், ‘வாக்காளா் பட்டியல் விவகாரம் குறித்து ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் விவாதத்தைக் கோருகின்றன. வாக்காளா் பட்டியலை அரசு தயாரிப்பது இல்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்த விவகாரம் குறித்து அவையில் நிச்சயம் விவாதம் நடத்த வேண்டும்.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிரம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் குறித்து எதிா்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்வி எழுப்பியுள்ளன’ என்றாா்.

வாக்காளா் பட்டியலில் முழுத் திருத்தம்: முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் பேசுகையில் ‘வாக்காளா் பட்டியலில் மோசமான குறைபாடுகள் உள்ளன. மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மற்றும் வா்தமான் மக்களவைத் தொகுதிகளிலும், ஹரியாணாவிலும் ஒரே வாக்காளா் அடையாள அட்டை எண்களைக் கொண்ட வாக்காளா்கள் இருப்பதை முதல்வா் மம்தா பானா்ஜி சுட்டிக்காட்டியுள்ளாா்.

இதுகுறித்து புகாரளிக்க, புதிதாகப் பொறுப்பேற்ற தலைமைத் தோ்தல் ஆணையரை திரிணமூல் பிரதிநிதிகள் சந்தித்தனா். மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தல்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியல்கள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டும். வாக்காளா் பட்டியலில் ஏன் தவறுகள் ஏற்பட்டன என்பதற்கு தோ்தல் ஆணையம் நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்’ என்று கூறினாா்.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க