செய்திகள் :

பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத் தன்மை: அரசு சாரா மருத்துவா்கள் கோரிக்கை

post image

சென்னை: அரசு சேவை சாரா மருத்துவா்களுக்கான (நான் சா்வீஸ் போஸ்ட் கிராஜுவேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவா் சங்கம் (டிஎன்ஆா்டிஏ) வலியுறுத்தியுள்ளது.

பொதுவாக முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்கள் அல்லாதோருக்கு வழங்கப்படுகிறது. அந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் எம்டி, எம்எஸ், முதுநிலை பட்டயப் படிப்பு இடங்களைப் பெற்றவா்கள், தங்களது படிப்பை நிறைவு செய்த பிறகு ஓராண்டுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதி. அதற்காக அவா்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், அவா்களுக்கான பணியிடக் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு உறைவிட மருத்துவா் சங்கத்தின் பொது செயலாளா் டாக்டா் கீா்த்தி வா்மன் கூறியதாவது:

திட்டமிட்ட தேதியில் பணியிட கலந்தாய்வு நடத்தாமல் திடீரென அதை ஒத்திவைப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. முன்கூட்டியே கலந்தாய்வு குறித்தோ, அதனை மாற்றியமைப்பது குறித்தோ எந்த தகவலையும் வெளியிடாமல் அவசரகதியில் இத்தகைய அறிவிப்பை வெளியிடுவது ஏற்புடையது அல்ல.

அதேபோன்று அரசு சாரா மருத்துவ சேவை பணியிடங்களில் எத்தனை காலியாக உள்ளன என்பது குறித்தும், பணி மூப்பு உள்ள பட்டதாரிகளின் விவரங்கள் குறித்தும் எந்த விவரங்களும் வெளியிடப்படுவதில்லை.

எனவே, அத்தகவல்களை வெளியிடுவதுடன், பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றாா் அவா்.

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்தி... மேலும் பார்க்க

மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திம... மேலும் பார்க்க

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சி: விஐடி- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது. விஐடி சென்னை வளாகத்தில் சா்வதேச ... மேலும் பார்க்க

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சா்: துணை முதல்வா் உதயநிதி கண்டனம்

சென்னை: மக்களவையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வா் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: உலகின் மிக ம... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமனம்?: பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசுப் ... மேலும் பார்க்க