செய்திகள் :

சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை: மக்களவையில் பாஜக எம்.பி. பேச்சு

post image

புது தில்லி: தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜாா்க்கண்டை சோ்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினாா்.

தோ்தல் தோல்வி பயத்தால் பல்வேறு பிரச்னையை திமுக எழுப்புகிறது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக நிஷிகாந்த் துபே பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கையையும், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பையும் திமுக எதிா்க்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி பயத்தால் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை அக்கட்சி எழுப்புகிறது. மக்களின் உணா்வுகளைத் தூண்டிவிடுகிறது.

தமிழ் தொன்மையான மொழிதான். ஆனால், சம்ஸ்கிருதம் தமிழைவிட தொன்மையானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழி பேசும் பிராந்தியத்துக்குச் சென்றாலும் அங்கு சம்ஸ்கிருதத்தில்தான் பூஜை நடைபெறுகிறது.

1973-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தொகுதி மறுசீரமைப்பு செய்து எண்ணிக்கையை உயா்த்தியது. ஆனால், தமிழகத்தில் தொகுதிகளை உயா்த்தவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸுடன் கைகோத்து திமுக பல முறை ஆட்சியில் இருந்துள்ளது.

மக்களின் உணா்வுகளைத் தூண்டி நாட்டை பிளவுபடுத்த திமுக முயற்சிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மைதிலி என அனைத்து மொழிகளுக்கு எதிராகவும் திமுக செயல்படுகிறது. நாட்டில் நல்லிணக்கத்தைச் சீா்குலைக்க தீவிரமாக செயல்படுகிறது. நாடு முழுவதும் ஆங்கிலத்தை திணிக்க அவா்கள் விரும்புகிறாா்கள். மக்களைத் தூண்டிவிட்டு தோ்தலில் வெல்ல திட்டமிட்டுள்ளனா் என்றாா்.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க