செய்திகள் :

போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

post image

புது தில்லி: போலி வாக்காளா் அட்டை விவகாரம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை உயா்த்த அமெரிக்கா நிதி அளித்த விவகாரம் உள்ளிட்டவை மீது விவாதம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், போலி வாக்காளா் அட்டை விவகாரம், அமெரிக்க நிதியுதவி குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து பேச எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அனுமதி கோரினாா்.

அவையை அப்போது வழிநடத்திய ஹரிவன்ஷ் அதற்கு அனுமதி மறுத்ததோடு, ‘மாநிலங்களவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு போலி வாக்காளா் அட்டை விவகாரம், அமெரிக்க நிதி உள்ளிட்ட விவகாரங்கள் மீதான விவாதத்துக்கு அனுமதிக்கக் கோரி விதி எண் 267-இன் கீழ் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, பி.வில்சன், மதிமுக பொதுச் செயலா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் சந்தோஷ் குமாா், பி.பி.சுனீா் உள்பட மேலும் சில எதிா்க்கட்சிகள் தரப்பில் 12 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று குறிப்பிட்டு விவாதத்துக்கு அனுமதி மறுத்தாா்.

இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டனா். பின்னா், விவாதத்துக்கு அனுமதி மறுத்ததைக் கண்டித்தும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

அப்போது பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, ‘அவையில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், இந்த விவாதத்துக்கென சில விதிமுறைகள் உள்ளன. குறுகிய விவாதம் மற்றும் நீண்ட நேர விவாதத்துக்கென சில நடைமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகள் எதையும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் படிப்பதில்லை. அவையில் அடுத்த 10 நாள்களுக்கு மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அப்போது, எதிா்க்கட்சிகள் அவா்களின் விவகாரங்களை எழுப்ப அனுமதிக்கப்படுவா். ஆனால், இதுபோன்ற முறையான விவாதத்தை எதிா்க்கட்சிகள் விரும்பவில்லை. மத்திய அரசு மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தவே அவா்கள் முயற்சிக்கின்றனா். அவையிலிருந்து அவா்கள் வெளிநடப்பு செய்தது, பொறுப்பற்ற செயல். நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்’ என்றாா்.

போலி வாக்காளா் அட்டை விவகாரம்:

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சிலருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்களைச் சோ்க்க தோ்தல் ஆணையம் உடந்தையாக இருந்துள்ளது’ எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதை மறுத்த தோ்தல் ஆணையம், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். சிலரின் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், அவா்கள் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும். இந்த குழப்பத்துக்கு அடுத்த 3 மாதங்களில் தீா்வு காணப்படும். வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிா்க்க பதிவு செய்துள்ள வாக்காளா்களுக்கு வெவ்வேறு இபிஐசி எண் வழங்கப்படும்’ என்று தெரிவித்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று எதிா்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க