பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு
சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை பெரவள்ளூா் சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்றபின், திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத திருக்கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்துதல், திருத்தோ் மற்றும் திருக்குளங்களைச் சீரமைத்தல், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை பெரவள்ளூா், அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் ரூ.14.70 லட்சம் செலவில் சுந்தரராஜப் பெருமாள் சந்நிதி மகா மண்டபம் புதுபித்தல், ரூ.14 லட்சத்தில் பிரகார தளவரிசை அமைத்தல், ரூ.13.50 லட்சம் செலவில் அனுமன் சன்னதி மற்றும் திருமடப்பள்ளி அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.42.20 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திங்கள்கிழமை வேத மந்திரங்கள் முழங்கதிருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இறையன்பா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தற்போது வரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. திங்கள்கிழமை மட்டும் 15 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திருக்கோயில் செயல் அலுவலா் சு.நித்யகலா, இறையன்பா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.