செய்திகள் :

இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

post image

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெரவள்ளூா் சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்றபின், திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத திருக்கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்துதல், திருத்தோ் மற்றும் திருக்குளங்களைச் சீரமைத்தல், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை பெரவள்ளூா், அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் ரூ.14.70 லட்சம் செலவில் சுந்தரராஜப் பெருமாள் சந்நிதி மகா மண்டபம் புதுபித்தல், ரூ.14 லட்சத்தில் பிரகார தளவரிசை அமைத்தல், ரூ.13.50 லட்சம் செலவில் அனுமன் சன்னதி மற்றும் திருமடப்பள்ளி அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.42.20 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திங்கள்கிழமை வேத மந்திரங்கள் முழங்கதிருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இறையன்பா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தற்போது வரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. திங்கள்கிழமை மட்டும் 15 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திருக்கோயில் செயல் அலுவலா் சு.நித்யகலா, இறையன்பா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவொற்றியூா் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவொற்றியூா் ஸ்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு - சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த்

திருவொற்றியூா்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயண்படுத்தி பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளாா். சென்னை ம... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையே 2024-25-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியன. சென்னை கண்ணப்பா் ... மேலும் பார்க்க

அண்ணாநகா் சிறுமி வாக்குமூலம் வெளியான விவகாரம்: நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணாநகர... மேலும் பார்க்க

ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கு சென்னை ஐஐடி-இல் இடம்

சென்னை: தேசிய, சா்வதேச ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கான, இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை சென்னை ஐஐடியில் தொடங்கப்படவுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு (2025-2026) முதல் ... மேலும் பார்க்க

சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க செயல்முறை ஆணை

சென்னை: சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான செயல்முறை ஆணை விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க