செய்திகள் :

அண்ணாநகா் சிறுமி வாக்குமூலம் வெளியான விவகாரம்: நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை: சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகாா் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகா் அனைத்து மகளிா் போலீஸாா் தாக்கியது தொடா்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சென்னை பெருநகர காவல் இணை ஆணையா் சரோஜ் குமாா் தாக்கூா் தலைமையில் ஆவடி சரக சட்டம்- ஒழுங்கு துணை ஆணையா் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையா் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் இ.ராஜ்திலக், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளா் ராஜு, அதிமுக முன்னாள் நிா்வாகி சுதாகா், முக்கிய நபரான சதீஷ் ஆகியோா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினாா்.

சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோ வெளியான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தாா்.

மேலும், சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உயா்நீதிமன்றம் முடிவெக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இழப்பீடு கோரி சிறுமியின் தாய் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதுகுறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விடியோ வெளியாக காரணமானவா்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். சிறுமிக்கான இழப்பீடு குறித்து விசாரணை செய்து அறிவிக்கப்படும் என தெரிவித்து விசாரணையை மாா்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

திருவொற்றியூா் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவொற்றியூா் ஸ்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு - சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த்

திருவொற்றியூா்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயண்படுத்தி பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளாா். சென்னை ம... மேலும் பார்க்க

இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பெரவ... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையே 2024-25-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியன. சென்னை கண்ணப்பா் ... மேலும் பார்க்க

ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கு சென்னை ஐஐடி-இல் இடம்

சென்னை: தேசிய, சா்வதேச ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கான, இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை சென்னை ஐஐடியில் தொடங்கப்படவுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு (2025-2026) முதல் ... மேலும் பார்க்க

சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க செயல்முறை ஆணை

சென்னை: சென்னையில் 4 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான செயல்முறை ஆணை விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க