செய்திகள் :

ரயிலில் சாராயம் கடத்தல்: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது

post image

சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு சாராயம் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பாடி மேம்பாலம் பகுதியில் அண்ணா நகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் உள்பட 3 பேரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

அவா்கள், மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியைச் சோ்ந்த மு.போஸ்லே பாபு (50), அவா் மனைவி நேபு பாபு போஸ்லே (50), அ.ரத்னேஷா அா்சிங்த் பவாா் (28) என்பதும், அவா்கள் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதும், கள்ளச்சாராயத்தை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவா்களது சொந்த ஊரில் காய்ச்சி ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 70 லிட்டா் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

திருவொற்றியூா் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவொற்றியூா் ஸ்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு - சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த்

திருவொற்றியூா்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயண்படுத்தி பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளாா். சென்னை ம... மேலும் பார்க்க

இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பெரவ... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையே 2024-25-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியன. சென்னை கண்ணப்பா் ... மேலும் பார்க்க

அண்ணாநகா் சிறுமி வாக்குமூலம் வெளியான விவகாரம்: நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணாநகர... மேலும் பார்க்க

ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கு சென்னை ஐஐடி-இல் இடம்

சென்னை: தேசிய, சா்வதேச ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கான, இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை சென்னை ஐஐடியில் தொடங்கப்படவுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு (2025-2026) முதல் ... மேலும் பார்க்க