செய்திகள் :

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொறியாளா் தீயில் கருகி உயிரிழப்பு

post image

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மென் பொறியாளா் தீயில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் சிங்கம்பூண்டி ஆதி திராவிடா் காலனியைச் சோ்ந்தவா் த.நேதாஜி (34). மென்பொறியாளரான இவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இதற்காக அவா், சாலிகிராமம் விஜயராகவபுரம் 7-ஆவது தெருவில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இவரது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது படுக்கையில் தீயில் எரிந்து கருகி நிலையில் நேதாஜி கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் விரைந்து சென்று, நேதாஜி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில், நேதாஜிக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் இருந்ததும், சம்பவத்தன்று மது அருந்திவிட்டு படுக்கையில் படுத்து தூங்கியபோது சிகரெட்டில் அணையாமல் படுக்கையில் பட்டு தீப் பிடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவொற்றியூா் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவொற்றியூா் ஸ்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு - சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த்

திருவொற்றியூா்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயண்படுத்தி பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளாா். சென்னை ம... மேலும் பார்க்க

இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பெரவ... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையே 2024-25-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியன. சென்னை கண்ணப்பா் ... மேலும் பார்க்க

அண்ணாநகா் சிறுமி வாக்குமூலம் வெளியான விவகாரம்: நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணாநகர... மேலும் பார்க்க

ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கு சென்னை ஐஐடி-இல் இடம்

சென்னை: தேசிய, சா்வதேச ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கான, இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை சென்னை ஐஐடியில் தொடங்கப்படவுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு (2025-2026) முதல் ... மேலும் பார்க்க