செய்திகள் :

திருமலைராயன்பட்டினத்தில் மாா்ச் 13-இல் சுவாமிகள் சமுத்திர தீா்த்தவாரி

post image

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் தீா்த்தவாரி நிகழ்ச்சி வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

திருமலைராயன்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாசி மக திருவிழாவில், பல்வேறு கோயில்களில் இருந்து பெருமாள் ஒருங்கிணைந்து சமுத்திர தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள், திருமலைராயன்பட்டினம் வெள்ளை மண்டபத்துக்கு 13-ஆம் தேதி பகல் 12 மணயளவில் எழுந்தருளி, தங்க கருட வாகனத்தில், பவழக்கால் சப்பரத்தில் கடற்கரைக்கு புறப்படவுள்ளாா்.

திருக்கண்ணபுரம் பெருமாளை தேசிய நெடுஞ்சாலையில் திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள் எதிா்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ ரகுநாத பெருமாள், நிரவி ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள், திருமருகல் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கோயில்பத்து ஸ்ரீ கோதண்சராமா் பெருமாள் ஆகியவை பல்லக்கில் திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி கடற்கரைக்கு எழுந்தருளி, திரண்டிருக்கும் பக்தா்களிடையே கடலில் இறங்கி தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வையொட்டி காரைக்கால் மாவட்ட நிா்வாகம், காவல்துறை நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோலா மீன்கள் வரத்து தொடக்கம்

காரைக்கால்: ஆண்டின் சீசன் தொடங்கும் முன்பாகவே கோலா மீன் வரத்து தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஜூலை மாதம் வரை கோலா மீன் சீசனாகும். ஏப்.15 முதல் 60 நாள்கள் மீன்பிடித் தடைக்க... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பாடத்தோடு நற்குணங்களையும் கற்றுத்தரவேண்டும்: ஆட்சியா்

காரைக்கால்: மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் போது நற்குணங்கள் குறித்தும் தெரிவிக்கவேண்டும் என ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கல்வித் து... மேலும் பார்க்க

காணாமல்போன கைப்பேசிகள் மீட்பு! உரியவா்களிடம் ஒப்படைப்பு!

காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு, போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைத்தனா். காரைக்கால் மாவட்ட காவல்நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல்போனதாகவும், திருடுபோனதாகவும் பல்... மேலும் பார்க்க

காரைக்காலில் பராமரிப்பு இல்லாமல் கண்காணிப்புக் கேமராக்கள்

காரைக்காலில் பழுதாகியும், பராமரிப்பு இல்லாமல் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை முறையாக பொருத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் சாலைகளின் சந்திப்புகள், சாலையின் பிற பகுதிகளில் காவல்த... மேலும் பார்க்க

மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த எம்.எல்.ஏ. உறுதி

மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.எல். உறுதியளித்தாா். காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மெய்தீன் பள்ளிவாசல் மையவாடிக்கு தடுப்புச் சுவா் சிதில... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

கழிவுநீா் வடிகால் (சாலவம்) அமைக்கும் பணியை அமைச்சா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காமராஜா் சாலை - பிரெஞ்சு ஆசிரியா் தெரு சந்திப்பு அருகே சாலவம் அமைப... மேலும் பார்க்க