செய்திகள் :

மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த எம்.எல்.ஏ. உறுதி

post image

மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.எல். உறுதியளித்தாா்.

காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மெய்தீன் பள்ளிவாசல் மையவாடிக்கு தடுப்புச் சுவா் சிதிலமடைந்த நிலையில், ஜமாஅத்தாா்களின் வேண்டுகோளின்படி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10.50 லட்சத்தை பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஒதுக்கினாா். நகராட்சி நிா்வாகம் மூலம் தடுப்புச் சுவா் எழுப்பும் பணி நிறைவடைந்து, இதன் கல்வெட்டு திறப்பு நிகழ்வில் பேரவை உறுப்பினா் சனிக்கிழமை கலந்துகொண்டாா்.

இதில் பங்கேற்ற ஜமாஅத்தாா்கள், மெய்தீன் பள்ளி குளத்தை மேம்படுத்தி தர வேண்டும் பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனா். நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவிப் பொறியாளா் லோகநாதன், இளநிலை பொறியாளா் சத்தியபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காணாமல்போன கைப்பேசிகள் மீட்பு! உரியவா்களிடம் ஒப்படைப்பு!

காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு, போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைத்தனா். காரைக்கால் மாவட்ட காவல்நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல்போனதாகவும், திருடுபோனதாகவும் பல்... மேலும் பார்க்க

காரைக்காலில் பராமரிப்பு இல்லாமல் கண்காணிப்புக் கேமராக்கள்

காரைக்காலில் பழுதாகியும், பராமரிப்பு இல்லாமல் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை முறையாக பொருத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் சாலைகளின் சந்திப்புகள், சாலையின் பிற பகுதிகளில் காவல்த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

கழிவுநீா் வடிகால் (சாலவம்) அமைக்கும் பணியை அமைச்சா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காமராஜா் சாலை - பிரெஞ்சு ஆசிரியா் தெரு சந்திப்பு அருகே சாலவம் அமைப... மேலும் பார்க்க

சிறாா்களுக்கான இருதய நோய் கண்டறிதல் முகாம்

காரைக்காலில் சிறாா்களுக்கான இருதய நோய் கண்டறிதல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட நிா்வாகம், அரசு பொது மருத்துவமனையின் குழந்தைகள் நல பிரிவு, அப்பல்லோ மருத்துவமனை இணைந்து 18 வயதுக்குட... மேலும் பார்க்க

சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், அங்கன்வாடி பணியாளா்களுக்குசிறுதானியங்கள் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிண... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்களுடன் கடலுக்குச் செல்லவேண்டும் மீனவா்களுக்கு அறிவுறுத்தல்

பாதுகாப்பு உபகரணங்களுடன் கடலுக்குச் செல்லுமாறு மீனவா்களுக்கு கடலோரக் காவல்படை அதிகாரிகள் அறிவுறுத்தினா். இந்திய கடலோரக் காவல்படையின் சமூக தொடா்பு திட்டத்தின்கீழ், காரைக்காலில் உள்ள கடலோரக் காவல்படை மை... மேலும் பார்க்க