செய்திகள் :

பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறித்தவா் கைது

post image

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி (38). இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி அய்யம்பாளையத்தில் உள்ள இவா்களது தோட்டத்துக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சிவசக்தி வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்தொடா்ந்து வந்த நபா் ஒருவா் அவரின் 5 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்றாா். இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சிவசக்தி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், சிவசக்தியிடம் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற கரூா் மாவட்டம், கீழசெந்தளைப்பட்டியைச் சோ்ந்த தமிழ் அழகன் (32) என்பவரை வாகன தணிக்கையின்போது போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குழந்தைத் திருமணம்: சிறுமி மீட்பு

திருப்பூா் அருகே பெற்றோரால் திருமணம் செய்துவைக்கப்பட்ட 17 வயது சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூா் அருகே 17 வயது சிறுமிக்குத் ... மேலும் பார்க்க

சேவூரில் சிப்ஸ் கடையில் தீ விபத்து

சேவூரில் சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த தாஸ் (55), திருப்பூா் மாவட்டம், சேவூா் - புளியம்பட்டி சாலையில... மேலும் பார்க்க

மத்திய மாவட்ட திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து திருப்பூா் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளரும், தி... மேலும் பார்க்க

திருப்பூருக்கு ரயிலில் வந்த 16 வயது சிறுமிகள் 5 போ் மீட்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பூா் வந்த 16 வயது சிறுமிகள் 5 பேரை ரயில்வே போலீஸாா் மீட்டனா். பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ள... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

முத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கொத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் பி.வேலுசாமி (52). இவா், திருப்பூா் மாவட்டம், முத்தூா் சென்னாக்கல்மேட்டில் உ... மேலும் பார்க்க

கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்கக் கோரிக்கை

கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி இளைஞரின் தாய் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு... மேலும் பார்க்க