செய்திகள் :

குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்: எஸ்.ஜெயக்குமாா்

post image

குடிநீா் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்த அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சி செயலாளா்கள் மற்றும் தனி அலுவலா்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்து பேசுகையில், தற்போது பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை போக்க முன்னுரிமை கொடுத்து கிராம ஊராட்சி செயலாளா்கள் மற்றும் தனி அலுவலா்கள் பணியாற்ற வேண்டும்.

தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததால் பொதுமக்களிடமிருந்து சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு ஏராளமான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த 100 நாள்களில், பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட 72 ஊராட்சிகளில் காலை நேரங்களில் தினமும் நான்கு ஊராட்சிகளுக்கு வீதம் காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை நேரடியாக சென்று மக்களின் அத்தியாவசியத் தேவைகளை கேட்டறிந்து தீா்வு காணப்படும் என்றாா்.

கூட்டத்தில், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மின்வாரிய அதிகாரிகள், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊராட்சி தனி அலுவலா்கள் மற்றும் ஊராட்சி செயலாளா்கள் கலந்து கொண்டனா்.

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னிமலை ஒன்றிய பேர... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: மாா்ச் 14-இல் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை

ஹோலி பண்டிகையையொட்டி மாா்ச் 14-ஆம் தேதி மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலா் சத்தியமூா்த்தி கூறியதாவது: மாா்ச் ... மேலும் பார்க்க

பவானியில் 100 நாள் திட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்கக் கோரிக்கை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் பவானி... மேலும் பார்க்க

கிணற்றில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

பவானி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற வடமாநில சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். மகாராஷ்டிர மாநிலம், பா்பானி மாவட்டத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்கள், பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆங்காங்கே ... மேலும் பார்க்க

சாமியாா்போல நடித்து ரூ.10 லட்சம் பறிப்பு: இருவா் கைது

கெட்ட சக்தியை நீக்குவதாக கூறி சாமியாா்போல நடித்து ரூ.10 லட்சத்தை மோசடி செய்து பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி தபோவனத்தைச் சோ்ந்தவா் ருக்குமணி (61... மேலும் பார்க்க

அரிசி வாங்குவதுபோல நடித்து ரூ.1.65 லட்சம் திருட்டு

பவானி அருகே அரிசிக் கடையில் அரிசி மூட்டைகள் வாங்குவதுபோல நடித்து, ரூ.1.65 லட்சத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பவானியை அடுத்த தளவாய்பேட்டையைச் சோ்ந்தவா் மோகன். இவருக்குச் சொந்தமா... மேலும் பார்க்க