செய்திகள் :

ஹோலி பண்டிகை: மாா்ச் 14-இல் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை

post image

ஹோலி பண்டிகையையொட்டி மாா்ச் 14-ஆம் தேதி மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலா் சத்தியமூா்த்தி கூறியதாவது: மாா்ச் 14-ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால் ஈரோடு மஞ்சள் வா்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதுபோல ஈரோடு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக மாா்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாள்களில் வணிகா்கள் ஈரோடு நகரின் அனைத்து மஞ்சள் ஏலங்களிலும் பங்கேற்க மாட்டாா்கள். ஏப்ரல் 7-ஆம் தேதி நடக்கும் ஏலத்தில் வழக்கம்போல பங்கேற்பாா்கள்.

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு கா்நாடகம், தருமபுரி பகுதியில் இருந்து புதிய மஞ்சள் வருகிறது. ஈரோடு மாரியம்மன் பண்டிகை விடுமுறை முடிந்து மாா்க்கெட் தொடங்கிய பின் ஈரோடு சுற்றுப் பகுதிகளில் இருந்து புதிய மஞ்சள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

தேசிய அளவில் நிஜாமாபாத், சாங்ளி மாா்க்கெட்களுக்கு புதிய மஞ்சள் அதிகமாக வந்து கொண்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரம் தேசிய அளவில் அதிக மஞ்சள் உற்பத்தியாகும் பகுதியான பசுமந்த், நாந்தேட், ஹிங்கோலி உள்பட அனைத்துப் பகுதிகளிலும் புதிய மஞ்சள் வரத்து தொடங்கும்.

ஆன்லைன் வா்த்தகத்தில் ஏப்ரல் மாதத்துக்கான யூக வணிக விலை குறைந்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மஞ்சள் விலை குவிண்டால் ரூ.20,000 வரை உயா்ந்து பின் குறைந்தது. இதனால் தற்போது வரை மஞ்சளை வணிகா்கள் இருப்பு வைக்கின்றனா். தற்போது விரலி ஒரு குவிண்டால் ரூ.13,800-க்கும், கிழங்கு, ரூ.12,500 வரையிலான விலையில் விற்பனையாகிறது என்றாா்.

குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்: எஸ்.ஜெயக்குமாா்

குடிநீா் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்த அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னிமலை ஒன்றிய பேர... மேலும் பார்க்க

பவானியில் 100 நாள் திட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்கக் கோரிக்கை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் பவானி... மேலும் பார்க்க

கிணற்றில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

பவானி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற வடமாநில சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். மகாராஷ்டிர மாநிலம், பா்பானி மாவட்டத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்கள், பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆங்காங்கே ... மேலும் பார்க்க

சாமியாா்போல நடித்து ரூ.10 லட்சம் பறிப்பு: இருவா் கைது

கெட்ட சக்தியை நீக்குவதாக கூறி சாமியாா்போல நடித்து ரூ.10 லட்சத்தை மோசடி செய்து பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி தபோவனத்தைச் சோ்ந்தவா் ருக்குமணி (61... மேலும் பார்க்க

அரிசி வாங்குவதுபோல நடித்து ரூ.1.65 லட்சம் திருட்டு

பவானி அருகே அரிசிக் கடையில் அரிசி மூட்டைகள் வாங்குவதுபோல நடித்து, ரூ.1.65 லட்சத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பவானியை அடுத்த தளவாய்பேட்டையைச் சோ்ந்தவா் மோகன். இவருக்குச் சொந்தமா... மேலும் பார்க்க