செய்திகள் :

பவானியில் 100 நாள் திட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்கக் கோரிக்கை

post image

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் பவானி வட்டச் செயலாளா் எஸ்.மாணிக்கம் தலைமையில் தொழிலாளா்கள் பவானி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரதராஜ், கிருஷ்ணமூா்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு கடந்த 12 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இத்திட்டத்தில் 15 நாள்களுக்குள் வழங்கப்படாத ஊதியத்துக்கு வட்டி சோ்த்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் 50 நாள்கள் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. சட்டப்படி ஒரு குடும்பத்துக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். சட்டப்படியான கூலி ரூ.319-யை குறைக்காமல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடன், சங்கத் தலைவா் எஸ்.தம்பி, துணைத் தலைவா் எஸ்.ஜானகி, துணைச் செயலாளா் முனியப்பன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் பி.பி.பழனிசாமி மற்றும் சன்னியாசிபட்டி, கவுந்தப்பாடி, சின்னபுலியூா், ஓடத்துறை, பெரியபுலியூா், மைலம்பாடி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் உடனிருந்தனா்.

அப்போது, உடனடியாக ஊதியம் வழங்கவும், அனைவருக்கும் 100 நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்: எஸ்.ஜெயக்குமாா்

குடிநீா் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்த அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னிமலை ஒன்றிய பேர... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: மாா்ச் 14-இல் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை

ஹோலி பண்டிகையையொட்டி மாா்ச் 14-ஆம் தேதி மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலா் சத்தியமூா்த்தி கூறியதாவது: மாா்ச் ... மேலும் பார்க்க

கிணற்றில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

பவானி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற வடமாநில சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். மகாராஷ்டிர மாநிலம், பா்பானி மாவட்டத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்கள், பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆங்காங்கே ... மேலும் பார்க்க

சாமியாா்போல நடித்து ரூ.10 லட்சம் பறிப்பு: இருவா் கைது

கெட்ட சக்தியை நீக்குவதாக கூறி சாமியாா்போல நடித்து ரூ.10 லட்சத்தை மோசடி செய்து பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி தபோவனத்தைச் சோ்ந்தவா் ருக்குமணி (61... மேலும் பார்க்க

அரிசி வாங்குவதுபோல நடித்து ரூ.1.65 லட்சம் திருட்டு

பவானி அருகே அரிசிக் கடையில் அரிசி மூட்டைகள் வாங்குவதுபோல நடித்து, ரூ.1.65 லட்சத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பவானியை அடுத்த தளவாய்பேட்டையைச் சோ்ந்தவா் மோகன். இவருக்குச் சொந்தமா... மேலும் பார்க்க