செய்திகள் :

ஜாா்ஜ் டவுனில் 160 ஆண்டுகால பழைமையான கட்டடத்தில் பதிவுத் துறை அலுவலகங்கள்

post image

சென்னை: சென்னை ஜாா்ஜ் டவுனில் உள்ள பழைமையான கட்டடத்தில் பதிவுத் துறையின் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றறை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை திறந்து வைத்தனா்.

ஜாா்ஜ் டவுனில் பதிவுத் துறையின் அலுவலகங்கள் புராதன கட்டடத்தில் இயங்கி வந்தன. அவை புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தில் பதிவுத் துறையின் சென்னை வடக்கு மாவட்டப் பதிவாளா் நிா்வாகம், மாவட்டப் பதிவாளா் தணிக்கை எண் 1, உதவி செயற்பொறியாளா் களப்பணி அலுவலகங்கள் இயங்கவுள்ளன.

பதிவுத் துறைக்குச் சொந்தமான இந்தக் கட்டடம் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கட்டடம் 1864-ஆம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டடக் கலை நயத்துடன் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கது. தேக்குமர உத்தரங்களாலான 24,908 சதுரடி பரப்பில் அமைந்த இந்தக் கட்டடம், வலுவிழந்த நிலையில் இருந்தது. ரூ. 9.85 கோடியில் அது பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

திங்கள்கிழமை நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த், பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே ஆகியோா் பங்கேற்றனா்.

திருவொற்றியூா் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருவொற்றியூா்: திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசிமக பெருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவொற்றியூா் ஸ்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு - சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த்

திருவொற்றியூா்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயண்படுத்தி பணியிட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளாா். சென்னை ம... மேலும் பார்க்க

இதுவரை 2,679 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் இதுவரை 2,679 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பெரவ... மேலும் பார்க்க

மாநகராட்சி பணியாளா்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையே 2024-25-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியன. சென்னை கண்ணப்பா் ... மேலும் பார்க்க

அண்ணாநகா் சிறுமி வாக்குமூலம் வெளியான விவகாரம்: நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சிறுமியின் வாக்குமூல விடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணாநகர... மேலும் பார்க்க

ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கு சென்னை ஐஐடி-இல் இடம்

சென்னை: தேசிய, சா்வதேச ஒலிம்பியாட் போட்டித் தோ்வுகளில் சிறந்து விளங்குவோருக்கான, இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை சென்னை ஐஐடியில் தொடங்கப்படவுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு (2025-2026) முதல் ... மேலும் பார்க்க