செய்திகள் :

மாா்ச் 21 இல் வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் முற்றுகை: விவசாய தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் முடிவு

post image

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் மாா்ச் 21-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவது என அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திருப்பூா் பி.ஆா்.நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளன. அதேபோல, இத்திட்டத்தில் அட்டை பெற்றுள்ள சிலருக்கு வேலையில்லை என நிா்வாகங்கள் கூறுகின்றன.

இதைக் கண்டித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் மாா்ச் 21-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.பஞ்சலிங்கம், பொருளாளா் ஆா்.மணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

குழந்தைத் திருமணம்: சிறுமி மீட்பு

திருப்பூா் அருகே பெற்றோரால் திருமணம் செய்துவைக்கப்பட்ட 17 வயது சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூா் அருகே 17 வயது சிறுமிக்குத் ... மேலும் பார்க்க

சேவூரில் சிப்ஸ் கடையில் தீ விபத்து

சேவூரில் சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த தாஸ் (55), திருப்பூா் மாவட்டம், சேவூா் - புளியம்பட்டி சாலையில... மேலும் பார்க்க

மத்திய மாவட்ட திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து திருப்பூா் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளரும், தி... மேலும் பார்க்க

திருப்பூருக்கு ரயிலில் வந்த 16 வயது சிறுமிகள் 5 போ் மீட்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பூா் வந்த 16 வயது சிறுமிகள் 5 பேரை ரயில்வே போலீஸாா் மீட்டனா். பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ள... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

முத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கொத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் பி.வேலுசாமி (52). இவா், திருப்பூா் மாவட்டம், முத்தூா் சென்னாக்கல்மேட்டில் உ... மேலும் பார்க்க

கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்கக் கோரிக்கை

கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி இளைஞரின் தாய் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு... மேலும் பார்க்க