செய்திகள் :

குடியாத்தம்: தேனீக்கள் கொட்டி ஒருவர் மரணம்; 12 பேருக்கு தீவிர சிகிச்சை... என்ன நடந்தது?

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ள சின்ன பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால மூர்த்தி மகன் செந்தில்குமார் (40). இவர், பெங்களூரில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி ஏரியாவில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் குடியாத்தம் அருகேயுள்ள சொந்த ஊருக்கு வந்திருந்தார். சின்ன பரவக்கல் துணை மின் நிலையம் பின்புறமுள்ள தனது குலதெய்வமான கன்னியம்மன் கோயிலில் இன்று காலை படையல் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தார். அப்போது, சாம்பிராணி புகை அதிகமாக போட்டதால், அதிலிருந்து கிளம்பிய புகை மூட்டம் அருகிலுள்ள மரத்திலிருந்த தேன் கூட்டை கலைத்தது. கூட்டிலிருந்து கிளம்பிய ராட்சத தேனீக்கள் கோயிலில் கூடியிருந்தவர்களை துரத்தித் துரத்திகொட்டியது.

உயிரிழந்த செந்தில்குமார்

குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் உள்பட அவரின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே செந்தில்குமார் உயிரிழந்துவிட்டார். செந்தில்குமாரின் மனைவி மஞ்சு, மகள் தீட்சிதா, மகன் பிஜு உள்பட மேலும் 12 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து, உயிரிழந்த செந்தில்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள இந்தச் சம்பவம் குறித்து, குடியாத்தம் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

இனப்பெருக்கத்திற்குப் பிறகு பெண் ஆக்டோபஸ்கள் இறந்துவிடுமா? - octopus குறித்த ஆச்சர்ய தகவல்கள்!

ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் இருந்து ஆக்டோபஸ்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. கடலின் ஆழத்தில் உள்ள பவளப்பாறைகளில் வாழ்ந்து வருகின்றன. ஆழ்கடலில் இருக்கும் ஆக்டோபஸ்கள் குறித்த ஆச்சர்ய தகவல்களை தெரிந... மேலும் பார்க்க

தேனி: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் கூட்டமாக வலம் வரும் காட்டு மாடுகள் - அச்சத்தில் விவசாயிகள்!

கோடைகாலம் தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மரங்கள் கொளுத்தும் வெயிலுக்கு கருகிவருகின்றன. மேலும் காட்டுத்தீ ஏற்பட்டு வனப்பகுதியில் தீ பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால் வெப்பம் காரமணாகவும், தண்... மேலும் பார்க்க

Penguin Divorce: பென்குயின் விவாகரத்து... `காலத்தோடு ஓடவேண்டிய ஓட்டப்பந்தயம் இது' | Explainer

குள்ளமான உருவத்தில், இரண்டு சிறிய கால்களை முன்னும்பின்னும் அடியெடுத்து வைத்து, அந்த அடிக்கு ஏற்றவாறு தலையை இங்கும் அங்கும் அசைத்து, இரண்டு இறக்கைகளையும் விரித்தவாரு நடக்கும் பென்குயின்களை யாருக்குத்தா... மேலும் பார்க்க

Beavers: அணைக்கட்டிய எலிகள்... எந்த நாட்டில் தெரியுமா?

ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசில், அரசு ஒர் அணை கட்டத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கான உரிய அனுமதி 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லையாம். ’நீங்க என்ன அணை கட்டுறது; நான் கட்டுறேன் பாருங்கடா’ என்கிற ரேஞ்சில... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தொடர்ந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கும் கடல் ஆமைகள்... காரணம் என்ன?

உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகிறது. அதில் குறிப்பாக 10 கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட மீன... மேலும் பார்க்க

வயநாடு: புலியைத் தொடர்ந்து யானை, முழு கடையடைப்பிற்கு அழைப்பு! - என்ன நடக்கிறது?

வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாட்டில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின் காரணமாக வனப்பகுதிகள் துண்டுபட்டு கிடக்கின்றன. வனவிலங்குகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தட... மேலும் பார்க்க