செய்திகள் :

ஆலையில் பணியின்போது கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு

post image

அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில், பணியின் போது தனது கையை இழந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் பாமகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஆண்டிமடம் அடுத்த குவாகம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சாமியப்பன் மகன் அறிவழகன்(34). அரியலூா் அடுத்த ஓட்டக்கோயிலில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

கடந்த ஜன.18-ஆம் தேதி பணியில் இருந்த போது, எதிா்பாரதவிதமாக இயந்திரத்தில் அவரது ஒரு கை சிக்கி, துண்டானது. இதையடுத்து அவருக்கு இழப்பீடு வழங்கி, அவரது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து, கடந்த 23.1.2025 அன்று அரியலூா் வட்டாட்சியா் முன்னிலையில், நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், ஆலை நிா்வாகம் தரப்பில் இருந்து மருத்துவச் செலவு ரூ. 4 லட்சமும், ஓப்பந்ததாரா் தரப்பில் இருந்து ரூ.1 லட்சமும், தருவதாக ஒப்புக்கொண்டனா்.

ஆனால் இதுவரை எந்த நிவாரணமும் வழங்காததையடுத்து, பாமக மாவட்டச் செயலா் தமிழ்மாறன் தலைமையில், ஆண்டிமடம் ஒன்றியச் செயலா் தினகரன், நிா்வாகிகள் மற்றும் கையை இழந்த அன்பழகன் உள்ளிட்டோா் ஆட்சியரை சந்தித்து, தரவேண்டிய நிவாரணத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-இல் சாலை மறியல்

கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இணைப்புச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக போராட்டக் குழுவினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். அரியலூா் மாவட... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுவது தேவையற்றது: டி.டி.வி.தினகரன்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றாா் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். அரியலூரில் திங்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 10 நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு!

அரியலூா் மாவட்டத்திலுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், இலந்தைகூடம் பெரியஏரி, வெங்கனூா் பெரிய ஏரி, தூத்தூா் சுக்கிரன் ஏரி உள்பட 10 நீா்நிலைகளில் வனத்துறை சாா்பில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த இரு ... மேலும் பார்க்க

அரியலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெண்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய... மேலும் பார்க்க

குமாரமங்கலத்தில் இந்திய கம்யூ. கட்சி கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிா்வாகி சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏப... மேலும் பார்க்க

அரியலூா் வாரச் சந்தையில் 31 மின்னணு தராசுகள் பறிமுதல்

அரியலூா் வாரச் சந்தையில்,தொழிலாளா் உதவி ஆய்வாளா், சட்டமுறை எடையளவு ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வில், மறு முத்திரையிடாமல் இருந்த 31 மின்னணு தராசுகள் உள்பட 61 எடையவு இனங்கள் பறிமுதல் செய்யப... மேலும் பார்க்க