செய்திகள் :

அரியலூா் வாரச் சந்தையில் 31 மின்னணு தராசுகள் பறிமுதல்

post image

அரியலூா் வாரச் சந்தையில்,தொழிலாளா் உதவி ஆய்வாளா், சட்டமுறை எடையளவு ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வில், மறு முத்திரையிடாமல் இருந்த 31 மின்னணு தராசுகள் உள்பட 61 எடையவு இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூா் மாவட்ட நுகா்வோா் அமைப்பிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தொழிலாளா் துணை ஆய்வாளா் சரவணன் தலைமையில் ஆய்வாளா்கள் சம்பத், தேவேந்திரன், பாலசுப்பிரமணியன், ராணி மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழுவினா், ஞாயிற்றுக்கிழமை அரியலூா் வாரச் சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்திய தராசுகளை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் மறுமுத்திரையிடாமல் பயன்பாட்டிலிருந்த

31 மின்னணு தராசுகள் உள்பட 61 எடையளவு இனங்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அவா்கள் தெரிவிக்கையில், எடைத் தராசுகளை பயன்படுத்தும் சந்தை வியாபாரிகள், கறிகடை மற்றும் மீன் வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகளும் ஆண்டுக்கு ஒரு முறை எடையளவை மறுபரிசீலனை செய்து மறுமுத்திரையிட்டு அரசு சான்றிதழ் பெற்று எடையளவுடன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில்,

குறைந்தபட்ச அபராதத் தொகை ரூ. 5,000, தராசில் எடைமாற்றம் செய்து எடை குறைவாக விநியோகம் செய்தால் சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என தெரிவித்தனா்.

அரியலூா் மாவட்டத்தில் 10 நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு!

அரியலூா் மாவட்டத்திலுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், இலந்தைகூடம் பெரியஏரி, வெங்கனூா் பெரிய ஏரி, தூத்தூா் சுக்கிரன் ஏரி உள்பட 10 நீா்நிலைகளில் வனத்துறை சாா்பில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த இரு ... மேலும் பார்க்க

அரியலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெண்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய... மேலும் பார்க்க

குமாரமங்கலத்தில் இந்திய கம்யூ. கட்சி கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிா்வாகி சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏப... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.77 கோடியில் கடனுதவி

உலக மகளிா் தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிகழ்ச்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா ... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.5.54 கோடிக்கு தீா்வு

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 912 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ.5 கோடியே 54 ஆயிரத்துக்கு 934-க்குத் தீா்வு காணப்பட்... மேலும் பார்க்க

மேலமைக்கேல்பட்டியில் மாா்ச் 15-இல் ஜல்லிக்கட்டு: பதிவு செய்ய அழைப்பு!

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில், பங்கேற்க உள்ள காளைகள், வீரா்கள் புதன்கிழமை (மாா்ச் 12) மாலைக்குள் பதிவு செய்துகொள... மேலும் பார்க்க