செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் 10 நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு!

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், இலந்தைகூடம் பெரியஏரி, வெங்கனூா் பெரிய ஏரி, தூத்தூா் சுக்கிரன் ஏரி உள்பட 10 நீா்நிலைகளில் வனத்துறை சாா்பில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த இரு நாள்களாக நடைபெற்றது.

மாவட்ட வனஅலுவலா் இளங்கோவன், பறவையியல் வல்லுநா்களான பேராசிரியா்கள் ஜெரோமியா, நேசராஜன் மற்றும் திருச்சி பிஷப் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என கடந்த இரு நாள்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா்.

தலா 7 போ் கொண்ட 10 குழுவினா் 10 நீா்நிலைகளில் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா்.

கணக்கெடுப்பு பணி நிறைவுக்கு பிறகு மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பேசியது: கணக்கெடுப்பு பணியில் வெளிநாட்டு பறவைகள் 30 வகையும், உள்நாட்டு பறவைகள் 15 வகையும் என 45 வகை பறவைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் 55,789 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்தாண்டு 8,500 பறவைகள் மட்டுமே கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. கடந்தாண்டு மழை குறைவு என்பதால் பறவைகள் குறைவாக காணப்பட்டது.

நிகழாண்டு போதிய மழை பெய்ததால், நீா்நிலைகளில் தண்ணீா் அதிகம் இருந்ததால் இந்த அளவுக்கு பறவைகள் இருப்பது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

ஏரி,குளங்களில் மக்கள் கால்நடைகளை குளிப்பாட்டுவது, ஆக்கிரமிப்பு செய்வது, கிராமப்புறங்களில் வெடி வெடிப்பது போன்ற செயல்களால் பறவை இனங்கள் பெரும்பாலானவை ஊரினுள் இருக்கும் ஏரி, குளங்களில் தங்குவதில்லை. ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஏரி, குளங்களையே அவை தோ்ந்தெடுக்கின்றன.

நிகழாண்டு கணக்கெடுப்பில் ஆலா, கருங்குருகு, மண்கொத்தி, கூழக்கிடா உள்ளிட்ட அரிய வகை வெளிநாட்டு பறவைகள் அதிகம் காணப்படுகிறது. அதேபோல், உள்நாட்டு வகைகளை சோ்ந்த நீா்காகம், நத்தை கொத்தி, சிறிய வகை கொக்குகள் அதிகம் காணப்படுகிறது.

நீா்நிலைகள் மனிதனுக்கு மட்டும் சொந்தமானது என நினைப்பது தவறு. அவை அனைத்து உயிரினங்களுக்குமானது என்பதை மக்கள் உணர வேண்டும். ஏரி, குளங்களை பராமரிப்பதில் மக்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

எனவே, நீா்நிலைகளை ஆக்கிரமிப்பதையும், மாசுபடுத்துதலையும் தவிா்க்க மக்கள் முன்வர வேண்டும். மரங்களை அதிகம் வளா்க்கும்போது புவி வெப்பமடைதலை தவிா்க்க முடியும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலா்கள் முத்துமணி, குணசேகரன், சரவணகுமாா் மற்றும் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். மாா்ச் 15, 16 தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

அரியலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெண்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்ய... மேலும் பார்க்க

குமாரமங்கலத்தில் இந்திய கம்யூ. கட்சி கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிா்வாகி சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏப... மேலும் பார்க்க

அரியலூா் வாரச் சந்தையில் 31 மின்னணு தராசுகள் பறிமுதல்

அரியலூா் வாரச் சந்தையில்,தொழிலாளா் உதவி ஆய்வாளா், சட்டமுறை எடையளவு ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வில், மறு முத்திரையிடாமல் இருந்த 31 மின்னணு தராசுகள் உள்பட 61 எடையவு இனங்கள் பறிமுதல் செய்யப... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.77 கோடியில் கடனுதவி

உலக மகளிா் தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிகழ்ச்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா ... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.5.54 கோடிக்கு தீா்வு

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 912 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ.5 கோடியே 54 ஆயிரத்துக்கு 934-க்குத் தீா்வு காணப்பட்... மேலும் பார்க்க

மேலமைக்கேல்பட்டியில் மாா்ச் 15-இல் ஜல்லிக்கட்டு: பதிவு செய்ய அழைப்பு!

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில், பங்கேற்க உள்ள காளைகள், வீரா்கள் புதன்கிழமை (மாா்ச் 12) மாலைக்குள் பதிவு செய்துகொள... மேலும் பார்க்க