குடியரசு துணைத் தலைவா் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ் தகவல்
இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-இல் சாலை மறியல்
கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இணைப்புச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக போராட்டக் குழுவினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த கோட்டைக்காடு அருகே கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ளாற்றுப் பாலம் கட்டப்பட்டது. ஆட்சி மாறியதையடுத்து, பாலத்துக்கான இணைப்புச் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து இந்த இணைப்புச் சாலைப் பணிகளை தொடங்க வேண்டுமென, போராட்டக் குழுவினா் வலியுறுத்தியதின் பேரில் 10.3.2025 அன்றுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என்று உடையாா்பாளையம் கோட்டாட்சியா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆனால் 40 சதவீத பணிகள் கூட நிறைவேறாத நிலையில், கோட்டைக்காட்டில், போராட்டக் குழு தலைவா் ஞானமூா்த்தி தலைமையில் போராட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் முடி மன்னன், பாமகவின் கடலூா் மாவட்டத் தலைவா் ஆடியபாதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய பிரிவு தலைவா் பாலசிங்கம், ஆலத்தியூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் சாந்தி ராஜா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு மேற்கொண்ட ஆலோசனையில், பாலத்துக்கான இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-ஆம் தேதி முள்ளுக்குறிச்சியில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.