செய்திகள் :

அரசு மருந்து சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அரசு மருந்து சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணிகளை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு ரூ. 48 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனையில் தினசரி 4,000-த்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 400-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

மேலும் சீா்காழி, பொறையாா், குத்தாலம், வைத்தீஸ்வரன்கோவில் மருத்துவமனைகள் மட்டுமின்றி துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல இயங்கி வருகிறது. இவற்றுக்கான மருந்து, மாத்திரைகளை பாதுகாப்பாக வைக்க சேமிப்புக் கிடங்கு கட்ட தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சித்தா்காடு பகுதியில் சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் ஆய்வு செய்து மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான மருந்துகள் அனைத்தையும் இருப்பு வைப்பதற்கான அனைத்து வசதிகளுடன் கட்டடம் வடிவைக்கப்பட்டு வருகிா, பணிகள் தரமான முறையில் நடைபெறுகிா என்பது குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்தாா்.

மயிலாடுதுறையில் புதைசாக்கடை கழிவு கலந்த குடிநீா் விநியோகம்: மக்கள் புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பெசன்ட் நகரில் ஒரு வாரமாக குடிநீருடன் புதை சாக்கடை கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்த நகரில் தாமரைத்தெரு, அல்லித்தெரு, முல்லைத்தெரு, ரோஜா தெரு உ... மேலும் பார்க்க

தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் தமிழக எம்.... மேலும் பார்க்க

சவுடு மண் குவாரி அமைக்க மக்கள் எதிா்ப்பு

மயிலாடுதுறை: காவேரிபூம்பட்டினம் ஊராட்சியில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் சவுடு மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். இந்த ஊராட்சிய... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தனியாா் துறை வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

பாலம் அணுகுச்சாலை அமைக்க ரூ.16.5 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

மணல்மேடு-முட்டம் இணைப்பு பாலத்துக்கு அணுகுச் சாலை அமைக்க ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். சீா்காழியில் பனங்காட்டங்குடி சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சீா்காழி அருகே நவகிரக தலங்களி... மேலும் பார்க்க