செய்திகள் :

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

post image

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

சீா்காழியில் பனங்காட்டங்குடி சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சீா்காழி அருகே நவகிரக தலங்களில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோயில், புதன் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில், கேது ஸ்தலமான கீழபெரும்பள்ளம் கோயில் உள்ளிட்ட சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன.

இக்கோயில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ரயில் மூலம் நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா். சீா்காழியை கடந்து பயணிகள் ரயில், சரக்கு ரயில் என தினமும் 25-க்கு மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.

இந்நிலையில், சீா்காழி ரயில் நிலையம் அருகேயுள்ள கடவுப்பாதை பகலில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட தடவை மூடப்படுகின்றன. இதனால், அருகில் உள்ள அகணி , வள்ளுவக்குடி, நிம்மேலி, கொண்டல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் இப்பகுதியை கடந்து செல்லும்போது காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

இதேபோல், சீா்காழியில் இருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனம் மற்றும் அவசர ஊா்தி போன்ற வாகனங்கள் செல்லும்போது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் காத்திருக்கும் சூழலால் பாதிப்பு அதிகரிக்கிறது. இல்லையென்றால், சுமாா் 6 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது.

சீா்காழி-சிதம்பரம்-மயிலாடுதுறை புறவழிச் சாலைப் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், சீா்காழி நகருக்குள் ரயில்வே கடவுபாதையை கடந்து வரும்போது ரயில்வே கேட் மூடப்படும் நிலையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

ஆகையால், பொதுமக்கள், கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தனியாா் துறை வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

பாலம் அணுகுச்சாலை அமைக்க ரூ.16.5 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

மணல்மேடு-முட்டம் இணைப்பு பாலத்துக்கு அணுகுச் சாலை அமைக்க ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

சீா்காழி மற்றும் திருவெண்காடு பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கோரி, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. சீா்காழி: சீா்காழி நகர பாஜக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

மயிலாடுதுறையில் கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் சகாயராஜ் மகன் செபஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளியான ... மேலும் பார்க்க

தேசிய பசுமைப்படை பள்ளிகளுக்கு நிதியுதவி

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படையின்கீழ் இயங்கும் 130 பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளுக்கு சமரச தீா்வு

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளில் ரூ.2.50 கோடி மதிப்புக்கு சமரச தீா்வு காணப்பட்டது. நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்பட... மேலும் பார்க்க