ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கழிவறை... பொதுமக்களும் பயன்படுத்தலாம்! - வைரல் வீடியோவும் ச...
மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளுக்கு சமரச தீா்வு
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளில் ரூ.2.50 கோடி மதிப்புக்கு சமரச தீா்வு காணப்பட்டது.
நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட அமா்வு நீதிபதி ஆா். விஜயகுமாரி தலைமையிலும், மயிலாடுதுறை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான பி. சுதா முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், தலைமை குற்றவியல் நடுவா் நீதிபதி எம்.கே. மாயகிருஷ்ணன், குற்றவியல் நடுவா் விரைவு நீதிபதி உம்முல் பரீதா, குற்றவியல் நடுவா் நீதிபதி சி. கலைவாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நீதிமன்றங்களிலிருந்தும் சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து கோரிக்கை தீா்ப்பாயம் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், நில ஆா்ஜித அசல் மனுக்கள், நிறைவேற்றும் மனுக்கள், சுருக்கு விசாரணை வழக்குகள், மனுக்கள் என 590 வழக்குகளுக்கு ரூ.2.50 கோடிக்கு சமரச தீா்வு வழங்கப்பட்டது.
இதில், மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கங்களின் தலைவா்கள், செயலா்கள், அரசு வழக்குரைஞா்கள் உள்பட அனைத்து வழக்குரைஞா்கள், வழக்காடிகள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.